கடவுள்

எல்லையற்ற சக்தி
(ஆண்டவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கடவுள் (god) என்பவர் அண்டம் முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர் என்றும், இறப்பு, பிறப்பு, இரவு, பகல், இன்பம், துன்பம் போன்ற உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும் ஏகாந்த (மறைபொருள்) நிலை என்றும் கடவுள் இருப்பதை நம்புபவர்கள் கருதுகின்றனர்.

மேற்கோள்கள் தொகு

எல்லாம் அறிந்தவர் தொகு

  • எங்கும் பார்க்கக்கூடிய இறைவனுடைய கண்ணிலிருந்து எது தப்பியிருக்க முடியும்? எது அவன் உள்ளத்தை ஏமாற்ற முடியும்? அவன் எல்லாம் அறிந்தவன். - மில்டன்[1]
  • உன் செயல்கள் அனைத்திலும் இறைவன் உன்னைக் காண்பதாக எண்ணிக்கொள் அவன் செயல்கள் அனைத்திலும் அவனைக் காண்பதற்கு முயற்சி செய். - குவார்லஸ்[1]

எல்லாம் வல்லவர் தொகு

  • இறைவனுடைய சர்வ வல்லமையைத் தவிர என் நம்பிக்கைக்கு வேறு ஆதாரமில்லை. - ரூதர்ஃபோர்ட்[1]
  • இறைவன். தான் மாறாமல், மாட்சிமை என்ற திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு. எல்லாவற்றிற்கும் ஒளியும் உயிரும் அளிக்கிறான்; வான் மண்டலத்தில் இயங்கும் கோளங்களையும், மாறி மாறி வரும் பருவ காலங்களையும் இயக்கி வருகிறான். - ஸாமர்வில்[1]

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தொகு

 
தனி நபராகக் கருதப்படும் ஒரு கடவுளில் எனக்கு நம்பிக்கையில்லை, இந்த நம்பிக்கையின்மையை நான் என்றும் மறுத்ததும் கிடையாது. அதற்கு மாறாக அதைத் தெளிவாகவே கூறியிருக்கிறேன்.
  • கடவுளின் முன் நாமனைவரும் சம அளவில் புத்திசாலிகள்/முட்டாள்கள்.
  • கடவுள் அண்டத்தைப் படைத்த போது அதை எவ்வாறு படைப்பது என்று விரும்பித் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவருக்கு இருந்ததா?
  • தனி நபராகக் கருதப்படும் ஒரு கடவுளில் எனக்கு நம்பிக்கையில்லை, இந்த நம்பிக்கையின்மையை நான் என்றும் மறுத்ததும் கிடையாது. அதற்கு மாறாக அதைத் தெளிவாகவே கூறியிருக்கிறேன்.

ஈ. வெ. இராமசாமி தொகு

  • மனிதன் முன்னேற்றத்தை தடுக்க ஏற்படுத்தியவையே கடவுளும் மதங்களும்.[2]
  • கடவுள் என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; சூழ்ச்சிக்காரர் செய்த தந்திரம்.[2]
  • சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், கடவுள் இல்லை என்பவர்கள் உலகத்தில் எப்படி இருக்க முடியும்?.[2]
  • கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பனனைச் சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை.[2]
  • ஆசையும், சுயநலமும் அற்றவனுக்குக் கடவுள் மற்றும் மோட்சம் தேவை இல்லை.[2]
  • பகுத்தறிவு, சுதந்திரம் உள்ள மனிதனுக்கு கடவுள் அருள் எதற்காகத் தேவை?.[2]

அப்துல் கலாம் தொகு

  • கடவுள் உறுதியளித்திருப்பது ஒவ்வொரு நாளுக்குமான சக்தியை உழைப்பிற்கான ஒய்வை! பாதைக்கான ஒளியை!.
  • நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.
  • அல்லாவின் ஆணை இல்லாமல் எதுவுமே நமக்குக் கிடைக்காது! அவரே நமது பாதுகாவலன்! என் மகனே! அல்லாவிடம் நம்பிக்கைக் கொள்!.
  • கடவுள், நம்மைப் படைத்தவர், நம்முடைய மனம் மற்றும் குணங்களில், உறுதி மற்றும் திறன்களை பெருமளவிற்குச் சேர்த்து வைத்துள்ளார். பிரார்த்தனைகளின் மூலம் இந்தச் சக்திகளை நாம் அடையவும் வளர்த்துக் கொள்ளவும் முடியும்.
  • ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல, உன்னைப் போலச் சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே.

புதுமைப்பித்தன் தொகு

  • கடவுள் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? ஒரு கூட்டத்தின் பாதுகாப்பிற்கு அது அவசியமானால் ஒரு பொய்யைச் சொல்லித்தான், கடவுள் என்ற பிரமையைச் சிருஷ்டித்தால் என்ன?[3]
  • இந்தக் கடவுள் விஷயம் ரொம்ப ஸ்வாராஸ்யமானது. அது தனிமனிதனுக்கு ஒரு தைரியத்தைக் கொடுக்கிறது. சமூகத்திற்கு ஒரு சக்தியைக் கொடுப்பது போல், நாஸ்திகம் தர்க்கத்தில் நிஜமகே இருக்கலாம். அது சுவாரஸ்யமற்றது. வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்த முடியாதது.[3]

பிறர் தொகு

  • 'அவன்' என்னும் மொழி அவனைக் குறைத்து விடுகிறது.[4]
  • ஏதேனும் பழுதிலாத ஒன்றை இயற்ற முயல்வதைப்போல் ஆன்மாவைப் புனிதமாக்குவதும் சமயவாழ்வு வாழச் செய்வதுமானது வேறெதுவும் இல்லை. ஏனெனில் பரிபூரணமே கடவுள். அதனால் பூரணத்தை நாட முயல்பவன் கடவுள் தன்மையை நாடுபவனாவான். மைக்கலாஞ்சலோ [4]
  • கடவுளின் நீதி மெதுவாகத்தான் நகரும். ஆனால் ஒருபொழுதும் வழியில் தங்குவதில்லை. தவறு செய்தவனைச் சேர்ந்தேவிடும்.ராபர்ட் பிரௌனிங்[4]
  • குழந்தை இயல்புடையவர்-அதாவது எளிதில் மகிழ்பவர், அன்பு செய்பவர், பிறர்க்கும் மகிழ்வூட்டுபவர். இவர்க்கே கடவுள் ராஜ்யம்.ஆர். எல். இசுட்டீவன்சன்[4]
  • கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற பிரச்னையைப் பற்றிச் சிந்திப்பது மனிதன் செய்யக்கூடாத ஒன்று. நாம் இந்த உலகத்தில் தோன்றியிருப்பதன் இலட்சியம், வாழ வேண்டுமென்பதற்காகவே யொழிய, கடவுள் இருக்கிறார் என்று வாதிடவோ, இல்லையென்று போராடவோ அன்று.சார்லஸ் டார்வின்[5]
  • மக்களிடையே கடவுளை நாடுக. -நோவாலிஸ்[4]
  • நானில்லையானால் கடவுளும் இருக்க முடியாது. -எக்கார்ட்[4]
  • கோவிலில் வைத்துக் கும்பிடும் கடவுளை மனிதனே சிருஷ்டித்தான். அதனால் மனிதன் தன்னைப் போலவே கடவுளையும் படைத்திருக்கிறான். -ஹெர்மீஸ்[4]
  • கடவுள் கோவில் கட்டும் இடத்தில் எல்லாம் சாத்தானும் ஒரு கோவில் கட்டிவிடுகிறான். அதுமட்டுமா? அவன் கோவிலுக்கே அடியார்களும் அதிகம். -டீபோ[4]
  • மனிதனுக்கு எத்துணைப் பைத்தியம்! ஒரு புழுவைச் சிருஷ்டிக்க முடியாது. ஆயினும் கணக்கில்லாத கடவுளரைச் சிருஷ்டித்துக் கொண்டேயிருக்கிறான். - மான்டெய்ன்[4]
  • கடவுள் தகுதியுடையவர்க்குத் தாட்சண்யம் காட்டுவார். தகுதியற்றவர்களே நியாயத்தை மட்டும் வழங்குவர். -பிளாட்டஸ்[4]
  • தெய்வபக்தி லட்சியமன்று, சாதனமே. அந்தச் சாதனத்தால் ஆன்ம விருத்தி அடையலாம். வேஷதாரிகளே தெய்வ பக்தியை லட்சியமாகச் செய்து கொள்வர். - கதே[4]
  • பரிபூரணமே தேவரை அளக்கும் கோல். பரிபூரணத்தில் பற்றே மனிதரை அளக்கும் கோல். -கதே[4]
  • ஆன்ம எளிமை கண்டே ஆண்டவன் மகிழ்கிறான். எளிமைக் குணத்தைக் கண்டுதான் மகிழ்கிறான்; இறக்கும் குணத்தைக் கண்டன்று. -கதே[4]
  • பரிபூரண நிலையில் ஆன்மாவுக்கு ஏற்படும் சொற்ப அவாவை வைத்தே கடவுள் இருப்பதைக் கணித சாஸ்திர முறையைக் காட்டிலும் அதிகமாய் நிரூபித்துக் காட்டலாம். -ஹெம்ஸ்டர் ஹூஸ்[4]
  • ஆண்டவன் இலன் எனினும் அறநெறி நிற்போம் என்பவரே அவன் அடியராவர். -ராபர்ட் பிரெளனிங்[4]
  • ஒருவன் கடவுள் பக்கம் இருப்பின், அவன் ஒருவனே பெரும்பான்மைக் கட்சி ஆகிவிடுவான். -வெண்டெல் பிலிப்ஸ்[4]
  • ஆன்மாவுக்கு வெளியே கடவுளைத் தேடினால் கடவுளின் விக்கிரகங்களை மட்டுமே காண்பாய். ஆன்மாவை ஆராய்ந்தால் அங்குள்ள உணர்ச்சிகளும் எண்ணங்களும் ஆண்டவனை அறிவிக்கும். அயலார்க்கு நன்மை செய்யும்பொழுதுதான் ஆண்டவனைத் துதிப்பதாகக் கூறமுடியும். -ஸ்வனரோலா[4]
  • கடவுள் பார்ப்பதைப் போல் எண்ணி மனிதரோடு வாழ்க மனிதர் கேட்பதைப் போல் எண்ணிக் கடவுளோடு பேசுக. -ஸெனீகா[4]
  • மனிதர் அறிய விரும்பாதது எதையும் கடவுளிடம் கேட்காதே. கடவுள் அறிய நீ விரும்பாதது எதையும் மனிதனிடம் கேட்காதே. -ஸெனீகா[4]
  • வட்டத்தில் எந்தவிடத்திருந்தும் மத்திக்குச் செல்ல வழியுண்டு. எவ்வளவு பெருந் தவறானாலும் இறைவனிடம் செல்ல வழியுண்டு. -ரூக்கர்ட்[4]
  • கடவுளை அறிதல், கடவுளிடம் அன்பு செலுத்துதல் இரண்டிற்கும் இடையிலுள்ள தூரம் எவராலும் இவ்வளவு என்று சொல்ல முடியாது. -பாஸ்கல்[4]
  • கடவுளை அறிந்துவிடுவோமென்று எதிர்பார்க்க இயலாது. ஆனால், கடவுளை அறியாமல் வேறு எதையும் அறியவும் எதிர்பார்க்க இயலாது. -பூடின்[4]
  • மனிதர்க்குப் பேருணர்ச்சி தந்து போருக்கு நடத்திச் செல்லும் மூன்று மொழிகள் கடவுள், நித்யத்வம், கடமை என்பன. முதல் விஷயம் அறிவுக்கு அப்பாற்பட்டது. இரண்டாவது நம்ப முடியாதது, மூன்றாவது ஒரு காலும் அலட்சியம் செய்ய முடியாதது. -மையர்ஸ்[4]
  • இறைவனைப்பற்றி நாம் விளக்குவதற்காகச் சிரமப்படாமலிருந்தால், அவரை நாம் எளிதாக அறிந்துகொள்ளலாம். - ஜோபெர்ட்[6]
  • பிரபஞ்சத்தில் கடவுள் பெற்றிருக்கும் ஸ்தானத்தையே நாம் நம் இதயங்களில் அவருக்கு அளிக்க வேண்டும். கடவுள் ஒரு சக்கர வளையம், அந்த வளையத்தின் மையப் புள்ளி எல்லா இடங்களிலும் இருக்கும். அதன் பரிதி எங்குமில்லை. - எம்பி டாக்ளஸ்[6]
  • இறைவனைப்பற்றி அவனுக்குப் பெருமையாயில்லாத ஓர் அபிப்பிராயம் கொள்வதைவிட, அவனைப்பற்றி அபிப்பிராயமே கொள்ளாதிருத்தல் மேலாகும்; ஏனெனில், பிந்தியது வெறும் நம்பிக்கைக் குறைவை மட்டும் காட்டும் முந்தியது அவதூறாகும். - புளுடார்க்[6]
  • இறைவன் இருக்கவில்லையானால், அவனை உண்டாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம். - வால்டேர்[6]
  • ஆண்டவர் உலகை ஆள்கிறார். நாம் நமது கடமையை மட்டும் அறிவோடு செய்ய வேண்டும். பயனை அவருக்கே விட்டுவிட வேண்டும் - ஜான்ஜே[6]
  • இருவர் இறைவனுக்கு உகந்தவர்கள்: அவனை அறிந்து கொண்டு தன் இதயம் முழுவதையும் அவனிடம் ஈடுபடுத்தித் தொண்டு செய்பவன் ஒருவன்; அவனை அறியாமல் தன் இதயம் முழுவதையும் அவனைத் தேடுவதில் ஈடுபடுத்துபவன் மற்றவன். - பானின்[6]
  • இறைவனுக்குப் பகைவனானவன் ஒருகாலும் மனிதனுக்கு நண்பனாக இருந்ததில்லை. - யங்[6]
  • நான் இறைவனுக்கு அஞ்சுகிறேன். இறைவனுக்கு அடுத்தாற் போல் அவனுக்கு அஞ்சாதிருப்பவனைக் கண்டு அஞ்சு கிறேன். - ஸாஅதி[6]
  • கடவுளை அண்டி வாழ்வாயாக நித்தியமான உண்மைகளுக்கு முன்னால், மற்றப் பொருள்கள் யாவும் உனககு அறபமானவைகளாகத் தோன்றும். - மசீயன்[6]
  • கடவுள் நம் ஆசைகளின் இலட்சியமாகவும். நம் செயல்களின் நோக்கமாகவும், நம் அன்புகளின் தத்துவமாகவும், நம் முழு ஆன்மாக்களையும் ஆட்சி செய்யும் சக்தியாகவும் இருக்க வேண்டும். - மாஸில்லன்[6]
  • நாம் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியவர்களல்லர். அவைகளைப் பின்பற்றிச் செல்ல வேண்டியவர்கள். - எபிக்டெடஸ்[6]
  • உரோமம் கத்தரிக்கப்பெற்ற ஆட்டுக்குட்டிக்காக இறைவன் காற்றை மென்மையாக வீசும்படி செய்கிறான். - ஸ்டெர்னி[6]
  • ஒருவர் உள்ள இடத்தில் கடவுள் இரண்டாமவராக உள்ளார்: இருவர் உள்ள இடத்தில், கடவுள் மூன்றாமவராக உள்ளார். முகம்மது நபி[7]
  • மானிட சமூகத்தை ஒரு குடும்பமாக அமைத்து, தாம் தந்தையாயிருந்து. உலகை நம் வீடாக்கிய கடவுள் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார். காலெரிட்ஜ்[7]
  • அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது. - திருவள்ளுவர்[6]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 135-136. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 பகுத்தறிவாளர் நாள்குறிப்பு (2009, 2010, 2011, 2012, 2013 ஆண்டிற்கானது, நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளுக்கான தாளின் தலை பகுதியிலும் உள்ளது), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியிடு
  3. 3.0 3.1 முல்லை பிஎல். முத்தையா (1998). புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள். நூல் 28-63. முல்லை பதிப்பகம். Retrieved on 22 ஏப்ரல் 2020.
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 4.14 4.15 4.16 4.17 4.18 4.19 4.20 4.21 4.22 4.23 4.24 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடவுள். நூல் 30- 34. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  5. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  6. 6.00 6.01 6.02 6.03 6.04 6.05 6.06 6.07 6.08 6.09 6.10 6.11 6.12 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 112-114. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  7. 7.0 7.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 133. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 
Wiktionary
விக்சனரியில் இருக்கும் கடவுள் என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கடவுள்&oldid=20603" இலிருந்து மீள்விக்கப்பட்டது