அன்பு என்பது நெருக்கமான உள்ளப் பிணைப்பு தொடர்பான ஓர் உணர்வும் அநுபவமும் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

அலெக்சான்டர் போப் தொகு

  • வாழ்க்கையின் வறுமையிலே துன்பப்படுவோர்களுக்காக இரங்குக! இன்புறுவோர் துன்புறும் மக்களுக்குக் காட்டும் இரக்கம் மட்டுமல்ல அது; கடன், கடமை, மனிதநேயம்.[1]

அன்னை தெரசா தொகு

  • நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.
  • இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.
  • அன்பிற்கு தடை என்றால் அந்த வேலிகளை தாண்டவே விரும்புவேன்.

காண்டேகர் தொகு

  • அன்பில் நம்பிக்கை வை; அது துயரில் கொண்டு போய் விட்டாலும் பரவாயில்லை; இதயத்தை மூடாதே.

காந்தி தொகு

  • பகைமையை அன்பால் வெல்லுங்கள்; சோம்பலை செயல் ஊக்கத்தால் வெல்லுங்கள்.
  • எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள்.
  • நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கருத்துகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் இதயங்கள் இணைவதற்குத் தடை ஏதுமில்லை.
  • அன்பு எப்போதும் பாதிப்படைவது. எப்போதும் வன்மம் கொள்ளாது, பழி வாங்காது.
  • அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும்.
  • மனித குலத்தை அன்பு என்ற விதி தான் ஆள்கிறது. எங்கே அன்பிருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது.

செசுடர் பீல்டு தொகு

  • மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே, ஒருவன் பெற்றிருக்க வேண்டிய பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம்.

மௌரசு தொகு

  • அன்பு காட்டுவது எச்சரிக்கை உணர்வை விடவும் சிறந்தது, மேலானது; ஆனால், தயக்கம் இல்லாமல் மற்றவர்களுக்குக் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

இங்கர்சால் தொகு

  • அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும்.
  • அன்பே இல்லாத மாளிகை காட்டு மிருகங்கள் வாழும் இருண்ட குகை.

அரிசுடோடில் தொகு

  • அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நாம் அன்பு செலுத்த முடியாது.

அரவிந்தர் தொகு

  • முழுமையான அன்பு இல்லையேல் முழுமையான அழகு இருக்க முடியாது; அழகு முழுமையாக இல்லாத இடத்தில் முழுமையான மகிழ்ச்சி ஏற்பட இயலாது.

கிருபானந்த வாரியார் தொகு

  • அன்பும் மரியாதையும் இருப்பவன் உலகத்தில் எதையும் சாதித்து விடுவான். தீமை செய்பவனும் அவனிடம் பணிவான்.
  • இதயத்திலிருந்து பிறக்கும் அன்பே பண்பு. மூளையிலிருந்து தோன்றும் கூற்றே அறிவு. அறிவை விட பண்பே உலகுக்குத் தேவை.

ராமகிருட்டிணர் தொகு

  • அன்பு அறிவில் இருந்தால் சத்தியம் பிறக்கும், அன்பு மனதில் இருந்தால் கருணை பிறக்கும், அன்பு உணர்வில் இருந்தால் காதல் பிறக்கும், அன்பு செயலில் இருந்தால் அஹிம்சை பிறக்கும், அன்பு கல்வியில் இருந்தால் தர்மம் பிறக்கும்.

வில்லியம் தொகு

  • மனிதர்கள் குறைகள் உள்ளவர்கள் தாம். அந்தப் பக்கத்தை மூடிவிட்டு அனைவரையும் நேசிக்க அன்பு என்ற கதவை மட்டும் திறந்து வையுங்கள். உங்கள் அன்பு உண்மையாக இருக்கும்போது உலகம் பிரகாசமாக இருக்கும்.

இயேசு கிறித்து தொகு

  • அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன். ஏனெனில் அன்பே கடவுள்.

முகமது நபி தொகு

  • அறிவு இறைவனின் உறைவிடத்தை நாடுகிறது. ஆனால் அன்புதான் இறைவனின் உறைவிடம்.

கதே தொகு

  • நமக்கு நன்மை செய்துகொள்ளச் சிறந்த வழி பிறர்க்கு அதைச் செய்வதாகும் இறைத்தால்தான் சேகரிக்க முடியும். சமூகத்தை ஒன்றாகக் கட்டிச் சேர்த்து வைத்திருப்பது அன்பு என்னும் பொற்சங்கிலி. - கதே[2]
  • பிறருடைய அன்பில் ஆனந்தம் காணும்பொழுதுதான் ஒருவன் உண்மையாக வாழ்ந்தவனாவான்.
  • சமூகத்தை ஒன்றாகக் கட்டிச் சேர்த்து வைத்திருப்பது அன்பு எனும் பொற்சங்கிலி.

சுவாமி விவேகானந்தர் தொகு

  • வேதனையைத் தாங்கும் வல்லமை, செயலாற்றும் வல்லமையை விட மிகப் பெரியது; அன்பின் வல்லமை, வெறுப்பின் வல்லமையை விட மிகப் பெரியது.
  • அன்பு செய், உதவி செய், உன்னால் முடிந்ததை செய், ஆனால் நிபந்தனை ஏற்படுத்தாதே.
  • எல்லாப் பெருக்கமும் வாழ்வு; எல்லாச் சுருக்கமும் சாவு; அன்பு என்பது பெருக்கம்; சுயநலம் என்பது சுருக்கம்; எனவே அன்புடையவனே வாழ்பவன்; சுயநலமுடையவன் செத்துக் கொண்டிருக்கிறான்.
  • வஞ்சனையால் பெரும்பணி எதையும் சாதித்து விட முடியாது;அன்பாலும் உண்மையான ஆற்றலாலும் தான் அரும் பெரும் சாதனைகள் நிறைவேறுகின்றன.
  • அன்பிருக்கிறதா உங்களிடம்? உங்களால் ஆகாத காரியம் ஒன்றுமே இல்லை.

மார்க் ட்வைன் தொகு

  • செவிடரும் கேட்கக்கூடிய, பார்வையற்றோரும் படிக்கக் கூடிய மொழிதான் அன்பு.

செல்லி தொகு

  • சாதாரண செயல்கள் கூட அன்புடன் கலந்தால் அழகு பெறுகின்றன.

தாகூர் தொகு

  • உங்கள் அன்பை இரகசியமாக வைத்திருக்காதீர்கள்.

சாக்கிரட்டீசு தொகு

  • மனிதர்களை எடை போட்டுக்கொண்டே இருந்தால் அவர்களை நேசிக்க நேரம் இருக்காது.

வில்லியம் சேக்சுபியர் தொகு

  • மாறுதல் கண்ட உடன் மாறிடும் அன்பு உண்மையிலேயே அன்பாகாது.[1]
  • பெண்களின் அழகிய தோற்றத்தைக்காட்டிலும், அவர்களுடைய அன்பே என் காதலைப் பெறும். - ஷேக்ஸ்பியர்[2]

நெப்போலியன் பொனபார்ட் தொகு

  • உண்மையான மனிதன் யாரையும் துவேஷிக்க மாட்டான்.[1]

செர்லாக் ஃகோம்ஸ் தொகு

  • ஒருவன் பணத்தால் நாயை வாங்கிவிட முடியும்; ஆனால் அன்பு ஒன்றினால்தான் அதன் வாலை ஆட்டி வைக்க முடியும்.

ஹென்ரிக் இப்சன் தொகு

  • அன்பு என்பதைப் போல, பொய்யும் புலையும் நிறைந்த மொழி, வேறு எதுவும் கிடையாது.[1]

ஜான் ரஸ்கின் தொகு

  • பெருந்தன்மையைக் காண்பதிலே, மற்றவர்களுக்கு அன்பு காட்டுவதிலே அதற்கேற்ப மன நெகிழ்வூட்டும் செயல்களைச் செய்து காட்டி மகிழ்ச்சி காண்பதே அன்பு என்ற கருணையின் அழகாகும்.[1]
  • அன்பும், நம்பிக்கையுமே ஓர் ஆன்மாவுக்குரிய தாய்ப்பால்.[1]
  • அன்பு முக்கியமாக வளர்வது ஒருவருக்கு ஒருவர் வழங்கிடும் ஈகை என்ற தத்துவ உணர்விலேதான்.[1]
  • சிறிது அன்பு குழந்தையிடம் காட்டினால் அது பன்மடங்கு திரும்பி தன் அன்பைக் கொட்டுகிறது.

கான்பூசியசு தொகு

  • அன்பு என்பது உதவி செய்வதுதான்; அனைவரிடத்தும் எல்லோரும் அன்பு காட்ட வேண்டும். இதனால் நல்லவர்களின் நட்பை நாடுங்கள்.[3]

பிறர் தொகு

  • அன்புணர்ச்சி இருந்தால், சாதாரணச் செயல்களும் பெருமையுள்ளவைகளாக விளங்குகின்றன. --தாக்கரே[2]
  • நன்மை செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியிருந்தால் அத்துடன் தீயகுணங்கள் அதிகமான அளவில் சேர்ந்திருக்க முடியாது; சுயநலத்தோடு சில நற்குணங்கள் கூடச் சேர்ந்திருப்பதில்லை -ஹோம்ஸ்[2]
  • இந்த உலகத்தில் நாம் கொடுப்பதுதான் நம்மைச் செல்வராக்குமே தவிர, நாம் பெற்றுக்கொள்வதன்று. - பீச்சர்[2]
  • உலகத்தின் நல்ல பொருள்களைத் தேவையுள்ளவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதில் எனக்குக் கிடைக்கும் இன்பத்தைப் பார்க்கினும் எனக்கு அதிக மகிழ்ச்சியளிப்பது வேறில்லை.- ஸெனீகா[2]
  • அன்பைப் போல் பெருகி வளர்வது வேறில்லை. ஒரு கையால் வாரி இறைப்பவர்கள். இரு கைகளால் அள்ளியெடுக்கிறார்கள். ஆனால், எப்பொழுதும் அது பணமாயிராது. வேறு நன்மையாகவும் இருக்கும். - ரே[2]
  • நல்ல மனிதனுடைய வாழ்க்கையில் சிறந்த பகுதி எதுவென்றால், அவ்வப்போது அவன் அன்புடன் சிறுசிறு செயல்களைச் செய்வதுதான், அவை அற்பமானவைகளாயும். குறிப்பிட முடியாதவைகளாயும், நினைவில் வைத்துக் கொள்ள வேண்டாதவைகளாயும் இருக்கும். - வோர்ட்ஸ்வொத்[2]
  • அன்புள்ள இதயத்தின் ஊற்று. அதைச் சுற்றியுள்ளவர்களின் முகங்களெல்லாம் புன்னகையுடன் விளங்கும். - வாஷிங்டன் இர்விங்[2]
  • அன்பு என்ற மொழியை ஊமையர் ചേ8 முடியும். செவிடர் கேட்டுப் புரிந்துகொள்ள முடியும். போவீ[2]
  • ஓர் எதிரியை உண்மையான உயர்ந்த முறையில் கொல்ல வேண்டும் என்றால். அவனை வதைப்பது வழியன்று. அன்பினால் நீ, அவன் பகைவனாயிருப்பதை மாற்றிவிட முடியும். அதனால் பகைவன் ஒழிந்துவிடுவான். - அலேய்ன்[2]
  • அன்புள்ள இதயம் இன்பத்தின் எல்லாவற்றிற்கும் வானுலகம் திறந்தேயிருக்கின்றது. - பெராங்கர்[2]
  • நம்முள் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றியிருக்கும் சிறு கூட்டத்தாரை அதிக மகிழ்ச்சியுடனும், மேலான நிலையிலும் வாழச்செய்வது கடமையாகும். ஏ. பி. ஸ்டேன்லி[2]
  • பிறரை இன்புறச்செய்தல் நம்மை மேல்நிலைக்கு உயரச் செய்யும். - என். எம். சைல்டு[2]
  • நல்ல உதவிகளை விதைத்தால், அவைகளிலிருந்து இனிய நினைவுகள் வளர்ந்து பெருகும். - திருமதி. டி. ஸ்டேயல்[2]
  • உதவி செய்பவன்தான் அதை உடனே மறந்துவிட வேண்டும் ஒருவனுக்குச் செய்த உதவியை அவனுக்கு நினைவுறுத்தலும் அதைப்பற்றிப் பேசுதலும். அவனை அவமானப்படுத்துவது போலாகும். -டெமாஸ்தனிஸ்[2]
  • இதயங்களை அன்பால் வசப்படுத்திக்கொள். எல்லோரும் உனக்குப் பணி செய்வார்கள். எல்லாப் பணப்பைகளும் உன்னுடையவையாகும். - பர்லே[2]
  • ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டத்தைக் குறைத்துக்கொள்ள உதவி செய்யாவிட்டால், நாம் எதற்காக வாழ்கிறோம்? - ஜியார்ஜ் எலியட்[2]
  • அன்புள்ள இதயம் இல்லாவிட்டால், நாம் நீதியாக இருக்க முடியாது - வாவினார் கூன்[2]
  • மனிதர்கள் தாங்கள் எல்லாரும் அனுபவித்து வரும் துயரத்தைக் குறைத்துக்கொள்வதற்குத் தமக்குள் அன்பு பரோபகாரம், இரக்கம் ஆகியவைகளைக் கைக்கொண்டாடி, மானிட வாழ்க்கையிலுள்ள பாதித் துயரம் குறைந்துவிடும். -அடிஸன்[2]
  • மதிப்பை அடிப்படையாகக் கொண்டதே அன்பு - பக்கிங்ஹாம்[2]
  • உண்மையாக அன்பு செலுத்துவோனுடைய இதயம் பூவுலகின் ஒரு சுவர்க்கம் அவனிடம் இறைவர் தங்குகிறார். ஏனெனில் இறைவர் அன்பு மயமானவர். - லாமென்னெய்ல்[2]
  • வாழ்க்கையில் தலைசிறந்த இன்பம் அன்பு -ஸர் வில்லியம் டெம்பின்[2]
  • அன்பு தானாக வருவது. அதை விலைக்கு வாங்க முடியாது- லாங்ஃபெல்லோ[2]
  • நாம் எவைகளில் அன்பு வைக்கிறோமோ அவைகளாலேயே உருவாக்கப்பெறுகிறோம். -கரே[2]
  • இதயத்தில் இடமிருந்தால், வீட்டிலும் இடமிருக்கும். -மூர்[2]
  • தெய்வத்தைப்பற்றிய தியானமும், அன்பும் மனிதனுக்கு இருந்தால் போதும் - அவன் மலைகளைப் போல் நெடுங்காலம் நிலைத்திருத்தலைப் போன்றது. - வாட்ஸ்[2]
  • பணிவுள்ள அன்புதான் சுவர்க்க வாயிலைக் காத்து நிற்கின்றது: செருக்குள்ள விஞ்ஞான அறிவன்று. -யங் [2]
  • அன்பு, மனிதர்களின் சுயநலத்தின் அடிப்படையில் எழும்புகிறது. தாங்கள் ஏதாவது நன்மை பெறுகிற வரையில் அன்பு செலுத்துவார்கள். அது நின்று போனதும் அன்பும் நின்றுபோகும். -நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
  • அன்பின் வழியது உயிர்நிலை. - திருவள்ளுவர்[2]
  • அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப. வையகத்து
    இன்புற்றார் எய்தும் சிறப்பு. - திருவள்ளுவர்[2]
  • அன்புடையார் - என்பும் உரியர் பிறர்க்கு. - திருவள்ளுவர்[2]
  • அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் - திருவள்ளுவர்[2]
  • ஈரம் இல்லாதது கிளை நட்பு அன்று. - முதுமொழிக்காஞ்சி[2]

பழமொழிகள் தொகு

  • எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால் அன்போடு பரிமாறுங்கள். -இங்கிலாந்து பழமொழி

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12. 
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 2.22 2.23 2.24 2.25 2.26 2.27 2.28 2.29 2.30 2.31 2.32 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 78-81. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
  4. நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.

வெளியிணைப்புக்கள் தொகு

 
Wiktionary
விக்சனரியில் இருக்கும் அன்பு என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அன்பு&oldid=20229" இலிருந்து மீள்விக்கப்பட்டது