அக்கறையின்மை (Apathy) என்பது பொதுவாக ஆர்வம் அல்லது அக்கறை இல்லாதது என வரையறுக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  • ஒரு கண்ணில் பெருமையையும். மறு கண்ணில் மரணத்தையும் வைத்திருந்தாலும், நான் இரண்டையும் வேற்றுமையில்லாமல் பார்ப்பேன். - ஷேக்ஸ்பியர் [1]
  • உடலை நெடுங்காலம் காத்துக்கொள்ள இதயமே இல்லாதிருத்தல் நலம். - ஜே. பி. ஸெள்[1]
  • அலட்சியம் பெரிய நூல்களை எழுதியதில்லை; புதிய அற்புத கருவிகளைக் கண்டுபிடித்ததில்லை; ஆன்மாவைத் திகைக்கவைக்கும் 'மாபெரும்' கட்டடங்களை நிறுவியதில்லை உள்ளத்தை உருக்கும் இசையைப் பாடியதில்லை; சித்திரங்களைத் தீட்டியதில்லை; மக்களுக்குப் பணிசெய்ய உன்னதமான தர்மங்களை மேற்கொண்டதுமில்லை மேன்மைக்குரிய இந்தச் செயல்களெல்லாம் ஊக்கத்தினாலும் உற்சாகத்தினாலும் இதயபூர்வமாகச் செய்யப்பெறுகின்றன உலகில் அடக்கமுடியாத அசுரன். அலட்சியம். -ஆனஸ்[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 50. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அலட்சியம்&oldid=19406" இலிருந்து மீள்விக்கப்பட்டது