"மெக்காலே" 1834ஆம் ஆண்டு இந்தியாவின் கல்வித்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டவர். கல்விமுறையை வடிவமைக்கும் அறிக்கையைத் தயார் செய்தவர்.

மேற்கோள்கள் தொகு

  • ஐரோப்பிய நூலகம் ஒன்றின் அலமாரியின் ஒரே ஒரு அடுக்கு, இந்திய-அரேபிய இலக்கியத்தின் ஒட்டுமொத்த சாரத்தைவிட மேன்மையானது.
  • (கல்வியில்) பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் அச்சிடுவதைக் கூட உடனடியாக நிறுத்திவிட வேண்டும். புத்தகம் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.
  • ஆங்கில இலக்கியமும் அறிவியலும் கற்பது இந்தியர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.
  •  படிப்பில் பிரியமில்லாத அரசனா யிருப்பதைவிட ஏராளமான நூல்களுடைய ஏழையாயிருப்பதையே விரும்புவேன். [1]
  • வீடு வீடாகச் சென்று 'வாக்கு' சேகரிப்பது பெருந்தவறான காரியம். பொது மக்கள் தங்கள் பொறுப்பைக் கடமையை உணர்ந்து நடந்துகொண்டால் ‘வாக்கு’ சேகரிக்கும் வீண் வேலை ஏன்? பயனற்ற-உயரிய குண நலன் அற்ற-திறனற்ற ஒருவரை மக்கட் பிரதிநிதி என்று கூறி, அந்த மனிதருக்கு ’வாக்கு’ போடுமாறு போய்க் கேட்பது வாக்காளரை அவமானப் படுத்துவதாகும்.— (1832)[2]
  • உலகத்திலுள்ள ‘மில்டனின் புத்தகங்களையெல்லாம் எரித்து விட்டால் கூட, என் ஞாபக சக்தியைக் கொண்டு, மீணடும், அவைகளை அப்படியே எழுதிவிடுவேன்.[3]

நபர் குறித்த மேற்கோள் தொகு

  • மெக்காலேவின் தந்தை ஜக்காரி மெக்காலே கறுப்பின மக்களின் விடுதலைக்கு உதவினார். ஆனால், அவரது மகன் தாமஸ் மெக்காலே அதைவிட மோசமான பழமைவாதப் பிடியில் இருந்த இந்தியாவைத் தனது கல்வி மூலம் மீட்டெடுத்தார்.[4]
    • 1878 சூன் 6 அன்று, இராசாராம் மோகன்ராயின் நண்பரான டேவிட் ஹாரேவின் 35வது நினைவு நாள் கூட்டத்தில் பேச வந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சீர்திருத்தவாதியுமான சுரேந்திர நாத் ஆற்றிய உரையில் குறிப்பிட்டது.

குறிப்புகள் தொகு

  1. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல்கள். நூல் 163-168. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 121-128. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  4. அருண் கண்ணன், மெக்காலே: இந்திய நவீனக் கல்வியின் பிதாமகன், இந்து தமிழ் திசை, 25, அக்டோபர், 2023

,

"https://ta.wikiquote.org/w/index.php?title=மெக்காலே&oldid=38045" இலிருந்து மீள்விக்கப்பட்டது