• யானைக்கும் அடி சறுக்கும்.
  • நொண்டி குதிரைக்கு சறுக்குனது சாக்காம்.
  • அடி மேல் அடி அடிச்சா அம்மியும் நகரும்.
  • அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்.
  • ஒருவனின் கடைசி பயணம் அவனின் மரணம்.
  • மனைவியையும், புத்தகங்களையும் இரவலாகக் கொடுக்காதே! போனால் திரும்பி வராது
  • நள்ளிரவில் சுதந்திரம் வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை.
  • வல்லான் வகுத்ததே வாய்க்கால்
  • பொம்பள சிரிச்சா போச்சு
  • சாண் பிள்ளைன்னாலும் ஆண் பிள்ளை
  • மூர்த்தி சிறுசுன்னாலும் கீர்த்தி பெருசு.
  • ஒன்னும் தெரியாத பாப்பா ஒரு மணிக்கு போட்டாளாம் தாப்பா.
  • பூனை கண்ணை மூடிகிட்டா உலகமே இருண்டு போச்சுன்னு நினைச்சுக்குமாம்.
  • கடைசி நிமிடம் என்றொரு விடயம் மட்டும் இல்லாதிருந்தால், என்னால் எந்த வேலையையுமே செய்ய இயலாது.
  • முட்டாளோடு வாதம் செய்யாதே, யார் முட்டாள் என்று பார்ப்பவருக்குத் தெரியாது.
  • புத்தகங்களைக் கடனாகக் கொடுப்பவன் முட்டாள். கடனாக வாங்கிய புத்தகத்தைத் திரும்பத் தருவன் அவனை விட பெரிய முட்டாள்.
  • சருகைக் கண்டு தணல் அஞ்சுமா
"https://ta.wikiquote.org/w/index.php?title=பெயரிலி&oldid=7051" இலிருந்து மீள்விக்கப்பட்டது