பிரதாப முதலியார் சரித்திரம்

முதல் தமிழ் புதினம்

பிரதாப முதலியார் சரித்திரம் என்பது 1857-இல் எழுதப்பட்டு 1879-இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இப்புதினம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது.

நூல் குறித்த மேற்கோள்கள் தொகு

  • பொழுது போக்குடன் பயனும் தந்து சுவையும் தந்த புத்தகங்களிலே பிரதாப முதலியார் சரித்திரத்தைக் குறிப்பிடுவேன். -கா. ந. அண்ணாதுரை[1]
  • வேதநாயகம் பிள்ளைவாள் இயற்றித் தமிழுலகத்திற்குத் தந்த பிரதாப முதலியார் சரித்திரம் நீதியோடு கலந்து தமிழ்ப் புதுயுகத்துக் கற்பனை எழுத்துக்கு நல்வித்தாயிற்று. இப்போதும் புது நூல்களோடு அது போட்டியிட்டு வெல்லும். -இராசகோபாலாச்சாரி[2]

மேற்கோள்கள் தொகு

  1. பிரதாப முதலியார் சரித்திரம் நூற்றாண்டு நினைவு சிறப்புப்‌ பதிப்பு : அக்டோபர்‌ 1979
  2. மேற்படி