ஜெர்மனி பழமொழிகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இதில் ஜெர்மனி மொழி பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.
- அண்டை வீட்டுக்காரருக்கு நஷ்டமில்லாமல் நாம் அடையும் இலாபமே இலாபம்.
- அழகிய பெண் செய்வதெல்லாம் சரிதான்.
- அழகைக் காதலித்தல் என்பதில்லை, காதலித்ததே அழகாகும்.
- ஆயுதங்களையும், பெண்களையும், பூட்டுக்களையும் தினந்தோறும் பார்த்துவர வேண்டும்.
- ஒவ்வொரு மணியும் (நேரமும்) நம்மைக் காயப்படுத்திக் கொண்டேயிருக்கின்றது, கடைசி மணி அடித்தவுடன் ஆவி பிரிகின்றது.
- ஒரு கன்னி எதையும் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது.
- ஒரு சேவல் பன்னிரண்டு கோழிகளை அடக்கியாளும், ஒரு பெண் ஆறு ஆடவர்களை அடக்கியாள்வாள்.
- கண்ணாடிக்குள் இருக்கும் பெண்ணையே ஒவ்வொரு பெண்ணும் நேசிக்கிறாள்.
- கன்னிப் பருவம் கதிரவன், கற்பு சந்திரன், விவாகம் இரவு.
- கன்னிப் பருவம் சாந்திமயம், கற்பு முக்தி நிலை, விவாகம் சிறைவாசம்.
- காதலர்களுக்குத் தக்க நேரம் தெரியும்.
- காதலர்களுக்கு காதவழி ஓர் அடியாகத் தோன்றும்.
- காதலர்கள் நேரத்தை ஆசையைக் கொண்டு அளக்கின்றனர்.
- காதலர்கள் பேச வேண்டிய விஷயம் அதிகம், ஆனால் அது ஒரே பழைய விஷயம்தான்.
- காதலின் உச்சத்தில் பேச்சுக் குறைந்து விடும்.
- காதலின் கண்ணுக்கு ரோஜா மலர் தான் தெரியும், முட்கள் தெரியமாட்டா.
- காதலுக்குக் காலம் கிடையாது.
- காதல் அணைந்தபின் கரித்துண்டுகளே மிஞ்சும்.
- காதல் அகழெலி, கல்யாணம் காட்டுப் பூனை.
- காதல் குருடன்று, ஆனால் அது பார்ப்பதில்லை.
- காதல்தான் காதலை வெல்ல முடியும்.
- காதற் கடிதங்களுக்குத் தேதி தேவையில்லை.
- காப்பியும் காதலும் சூடா யிருந்தால்தான் உருசி
- சிறு ஊடல் காதலைப் புதுப்பிக்கும்.
- தனியாயிருக்கும் பிரமசாரி மயில், காதல் புரிய ஒரு கன்னி கிடைத்தவன் சிங்கம், கலியாணமானவன் கழுதை
- துணையில்லாமல் செல்லும் பெண்ணுக்கு எல்லோரும் துணையாகச் சுற்றுவார்கள்.
- பன்னிரண்டு வயதில் குழந்தைப் பருவத்தைப் புதைக்கிறோம்; பதினெட்டில் வாலிபப் பருவத்தையும், இருபதில் முதற் காதலையும், முப்பதில் மனிதரிடம் கொண்ட நம்பிக்கையையும், அறுபதிலிருந்து சிறிது சிறிதாக ஐம்புலன்களையும் புதைத்து விடுகிறோம்.
- பேட்டையிலும் காதலிலும் ஒருவருக்குத் தொடங்கத் தெரியும், எங்கு முடிப்பது என்பது தெரியாது.
- மரணத்தைப் பற்றிச் சிந்திப்பவன் வாழத் தொடங்குகிறான் .
- மனிதர்களுக்குக் குணத்திற்கு முன்னால் அறிவு தேவை; பெண்களுக்கு அறிவுக்கு முன்னால் குணம் தேவை.
- மனிதன் தனக்குள் ஒரு கொடிய விலங்கை வைத்திருக்கிறான்
- வாழ்க்கை நமக்கே அளிக்கபெற்றதன்று, இரவலாக வந்தது.