மௌனம் என்பது சத்தம்போடாமல் இருப்பது அல்லது பேசாமல் இருப்பது ஆகும். இது குறித்த மேற்கோள்கள்

  • அறிவுள்ள மூளைதான் நாவை அடக்கியிருக்கச் செய்யும். - ஜே. லூகாஸ்[1]
  • மௌனத்திற்கு ஆச்சரியமான எத்தகைய ஆற்றலிருக்கின்றது உதடுகள் மூடியிருக்கும் பொழுது எத்தனை தீர்மானங்கள் செய்யப்பெறுகின்றன. எத்தனை ஆன்மார்த்திகமான வெற்றிகள் அடையப்பெறுகின்றன:ஆன்மா, இறைவனின் பார்வை தன்மீது விழுவதை அந்தரங்கமாக எவ்வளவு உணர்கின்றது. - எமர்சன்[1]
  • பேசாத வார்த்தை ஒருபோதும் தீமை விளைவிப்பதில்லை. - கோஸத்[1]
  • மௌனமாயிருக்கத் தெரியாதவனுக்கு நன்றாகப் பேசவும் தெரியாது. - புளுடார்க் [1]
  • உடலுக்கு உறக்கமும் ஓய்வும் ஊட்டமும் அளிப்பது போல, உள்ளத்திற்கு உண்மையான மெளனம் ஓய்வளிக்கும். அது சிறந்த ஒரு பண்பாகும். அது தவறுகளை மறைக்கும் இரகசியங்களைப் பாதுகாக்கும் தகராறுகளை நீக்கும் பாவத்தைத் தடுக்கும். - பென்[1]
  • நான் ஒரு வார்த்தையும் பேசவில்லை; அற்பமான இன்பங்கள். பேசினால்தான் உண்டாகும். ஆனால் உள்மனத்தின் ஆனந்தம் ஊமையாகவே பிறக்கின்றது. - எச். நீல்[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 307. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மௌனம்&oldid=35703" இலிருந்து மீள்விக்கப்பட்டது