பொறாமை அல்லது அழுக்காறு என்பது ஒரு உணர்ச்சி ஆகும். பொதுவாக பாதுகாப்பின்மை, பயம், பதட்டம் ஆகியவற்றின் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைக் குறிக்கிறது. பொறாமையானது பெரும்பாலும் கோபம், சோகம் மற்றும் வெறுப்பு போன்ற உணர்ச்சிகளின் கலவையாகும்.

மேற்கோள்கள் தொகு

  • பொமையின் கண்களுக்குச் சிறு பொருள்களெல்லாம் மிகப் பெரியவைகளாகவும். குள்ளர்கள் பெரிய அசுரர்களாகவும், சந்தேகங்களெல்லாம் உண்மையாகவும் தோன்றும். - செர்வான்டிஸ்[1]
  • பொறாமை முழுவதையும் ஆரம்பத்திலேயே கழுத்தை நெரித்துவிட வேண்டும். இல்லையெனில், அது வலிமையடைந்து உண்மையை வென்றுவிடும். - டேவனன்ட்[1]
  • ஆட்சி புரியும் ஒருவன், தனக்கு அடுத்தாற்போல் பட்டத்திற்குரியவனிடத்தில் எப்பொழுதும் சந்தேகமும், துவேஷமும் கொண்டிருப்பான். - டாஸிடஸ்[1]
  • தன் அண்டை வீட்டுக்காரனின் நற்குணத்தைப்பற்றிக் கேள்விப்படும்பொழுது எவன் வருத்தமடைகிறானோ, அவன் அதற்கு மாறான செய்தியைக் கேட்க இன்புறுவான். தங்களுடைய பண்புகளைக் கொண்டு புகழ் பெற முடியாதவர்கள். மற்றவர்களும் தங்கள் நிலைக்குத் தாழ்த்தப்பெற்றால், மகிழ்ச்சியடைவர்.[1]
  • பொறாமையுள்ளவன் தன் தாழ்ச்சியை எப்பொழுதும் உணர்ந்திருப்பான். - பிளினி[1]
  • அந்துப்பூச்சி ஆடையை அரிப்பது போல், அழுக்காறு மனிதனை அரித்துவிடும். - கிரிஸோஸ்டம்[1]
  • அடுத்த வீட்டுக்காரன் வெற்றியடைவதில் பொறாமைக்காரன் உடல் மெலிவான். - ஹொரேஸ்[1]
  • அழுக்காறு உடையார்க்கு அதுசாலும், ஒன்னார்
    வழுக்கியும் கேடு ஈன்பது. - திருவள்ளுவர்[1]
  • அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
    தீயுழி உய்த்து விடும். - திருவள்ளுவர்[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 290-291. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பொறாமை&oldid=35331" இலிருந்து மீள்விக்கப்பட்டது