சோம்பல் அல்லது சோம்பேறித்தனம் என்பது ஒரு செயலைச் செய்யும் திறனைக் கொண்டிருந்தாலும் செயல்பாடவோ அல்லது உழைக்கவோ விருப்பமில்லை ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  • சோம்பல் தீய ஒழுக்கத்தையோ, கெடுதலையோ உண்டர்க்கா விட்டால், பொதுவாக அது துக்கத்தை உண்டாக்கும். - ஸிட்னி ஸ்மித்[1]
  • மெலிந்த உள்ளங்களுக்குச் சோம்பல் சரணாலயம் மூடர்களுக்கு அது ஓய்வு நாள். - செஸ்டர்ஃபீல்டு[1]
  • வில்லை அதிகமாக வளைத்தால் ஒடிந்துவிடும்; மனத்தை வளைக்காமலே விட்டிருந்தால் அதுவும் ஒடிந்துவிடும். - பேக்கன்[1]
  • மனிதர்களிலே பதரான சோம்பேறியின் ஆரம்பநடவடிக்கைகள் இப்படியிருக்கும். அவன் மறைவான இடத்தில் சாய்ந்திருக்க விரும்புவான்; காரணமில்லாமல் தெரு முனைகளில் நின்று கொண்டிருப்பான் எங்காவது போய்க்கொண்டேயிருப்பான் அல்லது அதற்கடுத்த நாளோ, பல கடமைகளை நிறைவேற்ற வேண்டுமென்று எண்ணம் கொண்டிருப்பான். -டிக்கென்ஸ்[1]
  • சோம்பல் உன்னை ஏமாற்றாமல் காத்துக்கொள்: ஏனெனில், அதற்கு இன்று ஒரு நாளை கொடுத்தால், அது அடுத்த நாளையும் திருடிக்கொள்ளும். குரோகுவில்[1]
  • சோம்பல் உள்ளத்தின் உறக்கம். - வாவெனார்கூஸ்[1]
  • அவனுக்குப் பிறர் உதவியில்லாமல் முடியாது. - ஜான்ஸன்[1]
  • தனித்து இயங்கக்கூடிய முறையில் கடவுள் எவனையும் படைக்கவில்லை. -ஃபெல்ட்ஹாம்[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 202. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சோம்பல்&oldid=21623" இலிருந்து மீள்விக்கப்பட்டது