கொடுங்கோன்மை

கொடுங்கோன்மை என்பது அரசாங்கத்தின் ஒரு சர்வாதிகார அல்லது எதேச்சதிகார வடிவமாகும், இதில் அதிகாரம் என்பது ஒரு தனிநபரிடமோ அல்லது ஆளும் வர்க்கத்திலோ குவிந்திருக்கும்.

  • தீமையான சட்டங்களே கொடுங்கோன்மையில் மிகவும் இழிவானவை. - பர்க்[1]
  • கொடுங்கோன்மை எப்பொழுதும் பலவீனமானது. - ஜே. ஆர். ஸேவெல்[1]
  • காரணமில்லாமலும் கருத்தில்லாமலும் குடிமக்களின் அபிப்பிராயம் கட்டுப்படுத்தப்பெறுவது ஓரளவு கொடுங்கோன்மையாகும். இது அரசனால் அல்லது பிரபுக்களின் ஆட்சியால் அல்லது தேர்ந்தெடுக்கப்பெற்ற சட்டசபையால் செய்யப்படினும் கொடுமையேயாகும். - பிளாக்ஸ்டோன்[1]
  • மக்கள் அதை இருக்கவிடுவதால்தான் கொடுங்கோல் ஆட்சி செய்கின்றது. அதன் சக்தியாலன்று. ஷேக்ஸ்பியர்[1]
  • அரசன் ஆளவேண்டிய முறைப்படி ஆள்வான் கொடுங்கோலன் தன் விருப்பம் போல் ஆள்வான். அரசன் யாவருடைய நன்மையையும் நாடுவான்; கொடுங்கோலன் சிலருடைய மகிழ்ச்சியையே நாடுவான்.[1]
  • தன் விருப்பத்தைத் தவிர வேறு சட்டத்தை அறியாத அரசன் கொடுங்கோலன். - வால்டர்[1]
  • சட்டம் முடிவுறும் பொழுது கொடுங்கோல் ஆரம்பமாகின்றது. - வில்லியம் பிட்[1]
  • கொடுங்கோலரை எதிர்த்துக் கலகம் செய்தல் கடவுளுக்குக் கீழ்ப்படிவதாகும். - ஃபிராங்க்லின்[1]
  • கொடுங்கோன்மைக்கும் அராஜகத்திற்கும் இடையில் அதிகத் தூரமில்லை. - ஜே. பெந்தாம்[1]
  • கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
    அல்லலை செய்தொழுகும் வேந்து. - திருவள்ளுவர்[1]

குறிப்புகள் தொகு

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 166. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கொடுங்கோன்மை&oldid=21068" இலிருந்து மீள்விக்கப்பட்டது