கி. வீரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
*கடமை, உரிமை இரண்டையும் புரிந்து, ஒன்றுக்காக மற்றொன்றை விட்டுக் கொடுக்காத மன உறுதி வேண்டும்.<ref name="rationalist_diary" />
*ஒருவரது தவறைச் சுட்டுவது தவறல்ல; பலர்முன் சுட்டிக் காட்டி மிகக் கேவலமாக மற்றவர் நினைக்கும்படி செய்வது தவறு.<ref name="rationalist_diary" />
*இளைய பருவத்திலேயே புத்தகம் படிக்கும் பழக்கத்தை விளையாட்டைப் போலவே மிகுந்த ஈடுபாட்டுடன் பெருக்கி கொள்வது மிக நல்லதாகும்.<ref name="rationalist_diary" />
*நம்முடைய மனம் என்னும் காட்டுக் குதிரையை அடக்கிக் குறிப்பிட்ட சரியான வழியில் அதனை நடைபோட வைப்பதே பகுத்தறிவு.<ref name="rationalist_diary" />
*செய்த தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்கும் பழக்கத்தை நமது குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.<ref name="rationalist_diary" />
*நூலைப் படித்து, தகவல்களைப் பெற்று, ஆய்வு செய்து அறிவை பெருக்கினால் ஆயுள் வளரும், இயங்கினால்தான் மூளை; இன்றேல் அது வெறும் ஈளை.<ref name="rationalist_diary" />
*எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்பவனே சிறந்த மனிதன்.<ref name="rationalist_diary" />
*மணிக்கணக்கில் பேசாமல், மணிமணியாக பேசுதல் சிறப்புடைத்து.<ref name="rationalist_diary" />
*அறிவு ஆள வேண்டிய இடத்தில், உணர்ச்சிப் போதையை ஏற்று வாழ்க்கையை வீணாக்காதீர், மானிடர்களே!.<ref name="rationalist_diary" />
*நாம் இழக்கும் எதையும் திரும்ப பெற முடியும். இரண்டை இழந்தால் மீண்டும் பெறவே முடியாது. ஒன்று உயிர் மற்றொன்று காலம்.<ref name="rationalist_diary" />
*காலத்தைத் தன்கையில் வைத்துள்ள எவருக்கும், ஞாலம் தன் காலடியில் என்ற துணிவும் தன்னம்பிக்கையும் தானே வரும்.<ref name="rationalist_diary" />
*இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். புகழ் ஓட்டமும் அதுபோலத்தான். அதுதான் சீரிய உடல் நலத்திற்கு அடையாளம்.<ref name="rationalist_diary" />
*காலத்தை கருவூலப் பொருளைச் செலவழிப்பதைவிட, கவனம் அதிகமாகக் கொண்டு செலவழியுங்கள்.<ref name="rationalist_diary" />
*பெற்றோர்கள், குழந்தைகளை வளர்க்கும் போதே 'நன்றி' என்பதைச் சொல்லிக் கொடுத்துப் பழக்கப்படுத்திவிட வேண்டும்.<ref name="rationalist_diary" />
*ஆக்கச் சிந்தனையோடு வாழுங்கள், எதையும் எதிர்மறையாக சிந்தித்து வாழாதீர்கள். ஆக்கச் சிந்தனை ஊக்கத்தை, உயர்வை வளர்க்கும், எதிர்மறைச் சிந்தனை நம்மை பள்ளத்தில் தள்ளும்.<ref name="rationalist_diary" />
*கூட்டுக்குழு மனப்பான்மையை முதல் மூலதானமாகக் கொண்டு முன்னேறுங்கள்.<ref name="rationalist_diary" />
*நம்மை முன்நிறுத்தி மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளுவது முதலீடு அல்ல; அதுவும் வரவுக்கு மிஞ்சிய செலவு.<ref name="rationalist_diary" />
*வாழ்க்கையில் நாம் வெற்றி பெறுவதற்குத் தன்முனைப்பு ஒரு தடைக்கல்.<ref name="rationalist_diary" />
*ஒருவருக்கு மென்மேலும் தன்னம்பிக்கையை ஊட்டிக் கொண்டே இருந்தால் அவரை திறமைசாலியாக ஆக்கிக் காட்ட முடியும்.<ref name="rationalist_diary" />
*தன்னம்பிக்கையோடு செயல்படுவோர் சோதிடம் என்ற மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டால், அது எட்டிப் பழத்தைக் கடித்த கதைதான்.<ref name="rationalist_diary" />
*எண்ணம் இல்லாத செயல் - வரப்பற்ற வயல்; செயல் இல்லாத எண்ணம் - காட்டில் காய்ந்த நிலா.<ref name="rationalist_diary" />
*முதலில் திட்டமிட்டுச் செயலாற்றுங்கள், அதில் தோல்வி எதிர்ப்பட்டாலும் கவலைப்படாதீர்கள் மீண்டும் முயலுங்கள்; வெல்வீர்கள்!<ref name="rationalist_diary" />
*திட்டமிட்டுச் செயலாற்றுங்கள். தீர்வுகள் வெற்றியின் உச்சத்திற்கே உங்களை அழைத்துச்செல்லும்.<ref name="rationalist_diary" />
*இளைஞர்களே உங்கள் இளமைப்பருவம் உழுது, விதைத்து, உழைத்து அறுவடை செய்ய வேண்டிய அரிய பருவமாகும்.<ref name="rationalist_diary" />
*எதையும் எதிர்கொண்டு வாழ்வோம் என்ற இன்றைய துணிச்சல், நாளை வரும் துன்பங்களைக் கூட துரத்தியடிக்கும், மறவாதீர்!<ref name="rationalist_diary" />
*பிறருக்காக துயரப்படுவது என்பது மானிடப்பற்றை, மனித நேயத்தை மிகவும் வளர்க்கும்.<ref name="rationalist_diary" />
*முடிவு எடுக்கத் திணறாதீர், முடிவு எது வந்தாலும் ஏற்கும் ராணுவ வீரர்களைப் போன்ற நெஞ்சுரம் தேவை.<ref name="rationalist_diary" />
*ஏழைகளால் ஏற்றம் உண்டு; கோழைகளால் எந்தப் பயனும் ஏற்படவே ஏற்படாது.<ref name="rationalist_diary" />
*உங்கள் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு பேரிடரும், உங்களுக்கு உள்ளத்தில் உறுதி இருந்தால் அது பேரிடராக இருக்காது; பெரும் திருப்பத்திற்கு அடிகோலிய ஒரு சம்பவமாக மாற்றமடையலாம். மறவாதீர்!<ref name="rationalist_diary" />
*தீர்க்கவே முடியாத, தீர்வில்லாப் பிரச்சினைகள் என்று உலகில் எங்கும் எப்போதும் கிடையாது!<ref name="rationalist_diary" />
*நம் வாழ்வில் துன்ப நிகழ்வுகள், இன்பத்தின் அடித்தளம் என்பதை நாம் எண்ணாமல் வேதனையில் வெந்து விரக்தியால் சாகலாமா?<ref name="rationalist_diary" />
*மகிழ்ச்சியை எப்படி வரவேற்று மகிழ்கிறாயோ அப்படியே உனக்கேற்படும் துன்பத்தையும் ஏற்றுப் பழகுக.<ref name="rationalist_diary" />
*கடின உழைப்பும், லேசான மனமும் , எதையும் எதிர்கொள்ளும் துணிவும் உள்ளவர்களுக்குத் தூக்கம் எட்டாக்கனி அல்ல; கிட்டா மருந்தல்ல.<ref name="rationalist_diary" />
*தூக்கம் நம்மை குளுமைப்படுத்தும் ஒரு மாமருந்து; புத்துணர்ச்சியைத் தரும் ஊக்க மருந்து.<ref name="rationalist_diary" />
*துன்பத்துள்தான் இன்பம் இருக்கிறது. எனவே துன்பத்தை எதிர்கொள்ள தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன்.<ref name="rationalist_diary" />
*இருட்டை நாம் குறை கூறுவதைவிட, ஆளுக்கு ஒரு சிமிழ் விளக்கை ஏற்றி ஒளி வீசச் செய்து இருட்டை விரட்டுவோம்.<ref name="rationalist_diary" />
*வாழ்வில், இல்லறத்தில் நாம் இருந்தாலும் அதிலுள்ள பல்வேறு சுமைகளை மறந்து, இன்பத்தில் திளைக்க உதவிடும் ஒரே அறம் தொண்டறம் ஆகும்.<ref name="rationalist_diary" /><ref name="rationalist_diary" />
*நாம் நண்பர்களைப் பகைவர்களாக்க அன்றாடம் முயலுவதைத் தவிர்த்துப் பகைவர்களையும் நண்பர்களாக்கிட முயல வேண்டும்.<ref name="rationalist_diary" />
*நகைச்சுவை உணர்வுடன் இருங்கள்; நகைச்சுவை உணர்வுதான் பல நேரங்களில் நம் உள்ளத்தில் பசுமையை வளர்க்கும்.<ref name="rationalist_diary" />
*ஒருவரின் திறமைக் குறைவை விட, நாணயக் குறைவே அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.<ref name="rationalist_diary" />
*நாணயம் என்பது நம்மைப்பற்றிய உண்மைகளை நம்மிடம் (நம் உள்ளத்துள்ளும்) பிறரிடம் ஒளிக்காமல் சொல்வதே.<ref name="rationalist_diary" />
*நமக்கு நெருக்கடி, வீழ்ச்சி, தோல்வி வரும் போது யார் நம்முடன் மாறாமல் நிற்கிறார்களோ, அவர்களே தலைசிறந்த நண்பர்கள்.<ref name="rationalist_diary" />
*மூளைக்கும் உணவு தேவைதானே? சிந்தனையைக் கூர்மைப்படுத்த - சானை தீட்ட அறிவுள்ள நூல்களே தக்க உணவுகள் அதற்கு.<ref name="rationalist_diary" />
*மதுவும், சூதாட்டமும் மனிதர்களின் மானத்தையும், அறிவையும் பறிக்கும் கேடு கெட்ட நோய்கள் என்பதை உணருங்கள்.<ref name="rationalist_diary" />
*பணத்தை நமது பணியாளனாக நடத்துங்கள், ஒரு போதும் பணத்தை எஜமான் ஆக விடாதீர்.<ref name="rationalist_diary" />
*குழந்தைகளிடம் பாசத்தைக் கொட்டுங்கள். அன்பை மழையாகப் பெய்யுங்கள், அரவணைத்து முத்தம் கொடுங்கள்.<ref name="rationalist_diary" />
*செயல் என்ற காற்று, துயரத்தைத் துரத்தி அடித்து விரட்டும், மறவாதீர்.<ref name="rationalist_diary" />
*பணிகளைப் பகுத்துத் தொகுக்கும் முறையை வகுத்துக் கொள்ளுங்கள்.<ref name="rationalist_diary" />
*படித்தவர் எண்ணிக்கை பெருகிய அளவுக்குப் பண்பாளர்கள் எண்ணிக்கை பெருகவில்லையே.<ref name="rationalist_diary" />
*ஒருவரை நாம் அறிவாளியாகக் கருதுவதுகூட, உரையாடும் போது அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பொறுத்ததே.<ref name="rationalist_diary" />
*சிக்கலான பிரச்சனை வரும்போது சிங்கம்போல சிலிர்த்து எழுங்கள்! நரிகள் வளைகளைத் தேடுவது போல் ஓடாதீர்கள்!<ref name="rationalist_diary" />
*நம்மைப்பற்றி விமர்சனங்களை மற்றவர் செய்யும் போது, அது உண்மையாயிருந்தால் தாராள மனதோடு ஏற்றுத் திருத்திக்கொண்டு வாழ முயற்சியுங்கள்.<ref name="rationalist_diary" />
*எதையும் ஏற்றுப் பழகி, தீர்வு காணுவது எப்படி என்று திட சித்தத்துடன் அப்பிரச்சினையினை அலசி ஆராய்ந்தால், தீர்வு தென்பட்டே தீரும்.<ref name="rationalist_diary" />
*மனிதன் புகழ் ஆசை என்ற போதை ஏற ஏற மன நிறைவு கொள்ளத் தெரியாதவனாக ஆகிவிடுகிறான்.<ref name="rationalist_diary" />
*இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும்; புகழ் ஓட்டமும் அதுபோலத்தான், அதுதான் சீரிய உடல் நலத்திற்கு அடையாளம்.<ref name="rationalist_diary" />
*உங்களை ஒருவர் ஆத்திரமூட்டும் போதும், எரிச்சல் ஏற்படுத்தும் போதும் அதனை ஓர் அலட்சியப் புன்னகையோடு எதிர் கொள்ளுங்கள், அதற்குப் பதில் அளிக்காதீர்கள்; மதிப்பளிக்காதீர்கள்.<ref name="rationalist_diary" />
*இன்பத்தினை அடைய சிரிப்பு ஒரு திறவுகோல், அது மட்டுமல்ல, நம்மை மனிதம் மலர்ந்தவர்களாக காட்டிக் கொள்வதும் அச்சிரிப்புதான்.<ref name="rationalist_diary" />
*கடிகாரம் ஓடும் முன் ஓட பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்போம்.<ref name="rationalist_diary" />
 
==சான்றுகள்==
"https://ta.wikiquote.org/wiki/கி._வீரமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது