கி. வீரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
*உங்கள் மனத்துள், எதையும் பற்பல கோணங்களில் பார்க்கும் ஆழ்ந்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
*அறிவுரைகளை நாம் பிறருக்கு வழங்குமுன், கொஞ்சம் நமக்குள்ளே சில கேள்விகளைக் கேட்டுக் கொள்வது கட்டாயத் தேவை.
*மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல; அறிவின் ஊற்றுக்கள். உணர்ச்சியின் உறைவிடங்கள்.
*உங்கள் மனத்துள், எதையும் பற்பல கோணங்களில் பார்க்கும் ஆழ்ந்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
*அறிவுரைகளை நாம் பிறருக்கு வழங்குமுன், கொஞ்சம் நமக்குள்ளே சில கேள்விகளைக் கேட்டுக் கொள்வது கட்டாயத் தேவை.
*மனிதன் அடக்கம் என்ற போர்வையில் தன்னைப் போர்த்திக் கொள்ள வேண்டும்.
*அடக்கத்தின் சிறப்பே, நாம் உயர உயரப் பணிவும், அடங்கலும் அதிகமாகிக் கொண்டே வருதலில்தான் இருக்கிறது.
*உரமிடாத பயிரும், படித்து கூர்மையாக்கப்படாத அறிவும் வளர்ச்சி குன்றியவையே.
*எல்லோருக்கும் தேவையானது சிறந்த அறிவும், திறந்த இதயமும் ஆகும்.
*தொண்டால் உயரும் அறிவே உண்மை அறிவு; அது கற்பதால் வரும் அறிவு; வெறும் படிப்பால் பெறும் அறிவு அல்ல; இரண்டும் வெவ்வேறானவை. காரணம் கற்பது வேறு; படிப்பது வேறு.
*புத்தகங்களைப் படிப்பதை விட, மனிதர்களைப் படிப்பதே மிக மிக முக்கியம்.
*வாழ்க்கையில் தவறுகள் என்று ஒன்றுமில்லை; எல்லாம் பாடங்கள், அனுபவங்கள், அவைதான் நன்மையைத் தருபவை.
*எதிலும் துணிந்து பங்கேற்று பல்வேறு அனுபவங்களையும் சுவைக்கத் தவறாதீர்.
*தனக்கு நேர்ந்த அனுபவங்களை ஒவ்வொருவரும் மறு ஆய்வு செய்து, அசை போட்டு, சிந்தித்துப் பார்க்க தவறக் கூடாது.
*சிலருக்கு வாழ்க்கைக் கடலில் லட்சியக் கரை சேர அவரது அனுபவம் என்ற நீச்சல் பயன்படுகிறது.
*அன்றாடம் அனுபவம் என்ற பக்கங்களைக் கொண்டது நமது வாழ்க்கை; அதைத் திறந்த புத்தகமாக வைத்துக்கொள்வோம்.
*நோயைக் குணப்படுத்துவது டாக்டர்கள் கடமை, நோயாளியின் மனதைச் சரிப்படுத்துவது பார்வையாளரின் பொறுப்பு என்பதை மறவாதீர்.
*பகலும் இரவும் எப்போதும் ஒன்றையொன்று துரத்துவது போலத்தான், மகிழ்ச்சியும் சோகமும் ஒன்றையொன்று முந்தப் பார்க்கும்.
*நாம் மூச்சை இழுத்து வெளியே விடுவதுபோல, அன்பையும் இருவழிப்பாதை ஆக்கினால் உலகமே நம் கைக்குள் வரும்.
*மகிழ்ச்சி என்பது நமது சுற்றுச் சூழல் தருகின்ற கொடை அல்ல; உள்ளத்திலிருந்து கிளம்ப வேண்டிய ஊற்று.
*உடல் நலம் பெரிதும் மனநலத்தைப் பொறுத்தது.
*உடலை அழகுபடுத்திக் கொள்வதை விட மிகமிக முக்கியம் நம் மனதை, உள்ளத்தை அழகுபடுத்திக் கொண்டு, பிறர் மனதை மதித்து வாழ்வது.
*உள்ளத்தில் அறிவை நட்டுக் கொண்டு, மனத்தை அழகுபடுத்திக் கொள்வது மிகவும் தேவை.
*உணர்ச்சிகள் என்பன, நமது புலன்கள் மூலம் நாம் அறிவதையொட்டி நமக்குள் ஏற்படுத்தும் அலைகள்.
*அடிக்கடி உணர்ச்சி வயப்படாதீர்கள், உணர்ச்சிகளை நீங்கள் ஆளுங்கள், உணர்ச்சிகள் உங்களை ஆள விட்டுவிடாதீர்கள்.
*எதையும் பதற்றமின்றிச் சலனமில்லாமல் ஓடும் சிற்றோடை போல வாழ்க்கையைப் பார்க்கப் பழகியவரை, துன்ப அலைகள் அலைக்கழிக்கவே முடியாது.
*பிழைபட உணர்தலைப் போக்க வேண்டுமே தவிர, காக்கவோ பெருக்கவோ கூடாது.
*எதையும் நயம்பட உரைத்தலில்தான் நம் வாழ்வின் வெற்றி அமைந்துள்ளது.
*உறுதி மொழிகளை எப்போதும் நிதானித்து அளியுங்கள்; அவசரப்பட்டுக் கூறி பிறகு அவதிக்குள்ளாகாதீர்கள்.
*நாம் பிறருக்கு உதவும் போது ஏற்படும் இன்பம்தான் நமது மனிதநேயத்தினை அளக்கும் கருவி.
*நல்ல நூல்களை நாள்தோறும் படிப்பவர்களின் மனம் விசாலப் பார்வையால் விரியும், அகண்டமான அந்த அறிவினால் உலகை விழுங்க முடியும்.
*எப்போதும் மவுனம் தேவையில்லை; தேவைப்படும்போது மவுனம் சிறந்த ஆயுதம்.
*எளியதைச் செய்ய எவராலும் முடியும். எதிர்கொள்ள பலரும் அஞ்சும் பணியை செய்ய என்னால் முடியும் என்று துணிவு கொள்க.
*காதல் என்பது துள்ளும் இளமைப் பருவத்தில் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் கவர்ச்சியால் ஈர்க்கப்படுதல்.
*நாம் மந்தைகள் அல்ல ஒரே பக்கம் ஓடிச்செல்ல, மனிதர்கள்! நாட்டுக்கு நாடு மட்டுமல்ல; வீட்டுக்கு வீடு மனிதர்களின் எண்ண ஓட்டங்கள் மாறுபடுகின்றன, வேறுபடுகின்றன.
*கையில் ஒரு மனிதனுக்குக் காசில்லா நிலை ஏற்பட்டாலும், மனதில் மாசில்லா நிலையிலிருந்து அவன் மாறக்கூடாது.
*நோய்களில் கொடிய நோய் மூடநம்பிக்கை என்ற நோய்தான்.
*கடமை, உரிமை இரண்டையும் புரிந்து, ஒன்றுக்காக மற்றொன்றை விட்டுக் கொடுக்காத மன உறுதி வேண்டும்.
*ஒருவரது தவறைச் சுட்டுவது தவறல்ல; பலர்முன் சுட்டிக் காட்டி மிகக் கேவலமாக மற்றவர் நினைக்கும்படி செய்வது தவறு.
*இளைய பருவத்திலேயே புத்தகம் படிக்கும் பழக்கத்தை விளையாட்டைப் போலவே மிகுந்த ஈடுபாட்டுடன் பெருக்கி கொள்வது மிக நல்லதாகும்.
*நம்முடைய மனம் என்னும் காட்டுக் குதிரையை அடக்கிக் குறிப்பிட்ட சரியான வழியில் அதனை நடைபோட வைப்பதே பகுத்தறிவு.
*செய்த தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்கும் பழக்கத்தை நமது குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
*நூலைப் படித்து, தகவல்களைப் பெற்று, ஆய்வு செய்து அறிவை பெருக்கினால் ஆயுள் வளரும், இயங்கினால்தான் மூளை; இன்றேல் அது வெறும் ஈளை.
*எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்பவனே சிறந்த மனிதன்.
*மணிக்கணக்கில் பேசாமல், மணிமணியாக பேசுதல் சிறப்புடைத்து.
*அறிவு ஆள வேண்டிய இடத்தில், உணர்ச்சிப் போதையை ஏற்று வாழ்க்கையை வீணாக்காதீர், மானிடர்களே!.
*நாம் இழக்கும் எதையும் திரும்ப பெற முடியும். இரண்டை இழந்தால் மீண்டும் பெறவே முடியாது. ஒன்று உயிர் மற்றொன்று காலம்.
*காலத்தைத் தன்கையில் வைத்துள்ள எவருக்கும், ஞாலம் தன் காலடியில் என்ற துணிவும் தன்னம்பிக்கையும் தானே வரும்.
*இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். புகழ் ஓட்டமும் அதுபோலத்தான். அதுதான் சீரிய உடல் நலத்திற்கு அடையாளம்.
*காலத்தை கருவூலப் பொருளைச் செலவழிப்பதைவிட, கவனம் அதிகமாகக் கொண்டு செலவழியுங்கள்.
*பெற்றோர்கள், குழந்தைகளை வளர்க்கும் போதே 'நன்றி' என்பதைச் சொல்லிக் கொடுத்துப் பழக்கப்படுத்திவிட வேண்டும்.
*ஆக்கச் சிந்தனையோடு வாழுங்கள், எதையும் எதிர்மறையாக சிந்தித்து வாழாதீர்கள். ஆக்கச் சிந்தனை ஊக்கத்தை, உயர்வை வளர்க்கும், எதிர்மறைச் சிந்தனை நம்மை பள்ளத்தில் தள்ளும்.
*கூட்டுக்குழு மனப்பான்மையை முதல் மூலதானமாகக் கொண்டு முன்னேறுங்கள்.
*நம்மை முன்நிறுத்தி மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளுவது முதலீடு அல்ல; அதுவும் வரவுக்கு மிஞ்சிய செலவு.
*வாழ்க்கையில் நாம் வெற்றி பெறுவதற்குத் தன்முனைப்பு ஒரு தடைக்கல்.
*ஒருவருக்கு மென்மேலும் தன்னம்பிக்கையை ஊட்டிக் கொண்டே இருந்தால் அவரை திறமைசாலியாக ஆக்கிக் காட்ட முடியும்.
*தன்னம்பிக்கையோடு செயல்படுவோர் சோதிடம் என்ற மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டால், அது எட்டிப் பழத்தைக் கடித்த கதைதான்.
*எண்ணம் இல்லாத செயல் - வரப்பற்ற வயல்; செயல் இல்லாத எண்ணம் - காட்டில் காய்ந்த நிலா.
*முதலில் திட்டமிட்டுச் செயலாற்றுங்கள், அதில் தோல்வி எதிர்ப்பட்டாலும் கவலைப்படாதீர்கள் மீண்டும் முயலுங்கள்; வெல்வீர்கள்!
*திட்டமிட்டுச் செயலாற்றுங்கள். தீர்வுகள் வெற்றியின் உச்சத்திற்கே உங்களை அழைத்துச்செல்லும்.
*இளைஞர்களே உங்கள் இளமைப்பருவம் உழுது, விதைத்து, உழைத்து அறுவடை செய்ய வேண்டிய அரிய பருவமாகும்.
*எதையும் எதிர்கொண்டு வாழ்வோம் என்ற இன்றைய துணிச்சல், நாளை வரும் துன்பங்களைக் கூட துரத்தியடிக்கும், மறவாதீர்!
*பிறருக்காக துயரப்படுவது என்பது மானிடப்பற்றை, மனித நேயத்தை மிகவும் வளர்க்கும்.
*முடிவு எடுக்கத் திணறாதீர், முடிவு எது வந்தாலும் ஏற்கும் ராணுவ வீரர்களைப் போன்ற நெஞ்சுரம் தேவை.
*ஏழைகளால் ஏற்றம் உண்டு; கோழைகளால் எந்தப் பயனும் ஏற்படவே ஏற்படாது.
*உங்கள் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு பேரிடரும், உங்களுக்கு உள்ளத்தில் உறுதி இருந்தால் அது பேரிடராக இருக்காது; பெரும் திருப்பத்திற்கு அடிகோலிய ஒரு சம்பவமாக மாற்றமடையலாம். மறவாதீர்!
*தீர்க்கவே முடியாத, தீர்வில்லாப் பிரச்சினைகள் என்று உலகில் எங்கும் எப்போதும் கிடையாது!
*நம் வாழ்வில் துன்ப நிகழ்வுகள், இன்பத்தின் அடித்தளம் என்பதை நாம் எண்ணாமல் வேதனையில் வெந்து விரக்தியால் சாகலாமா?
*மகிழ்ச்சியை எப்படி வரவேற்று மகிழ்கிறாயோ அப்படியே உனக்கேற்படும் துன்பத்தையும் ஏற்றுப் பழகுக.
*கடின உழைப்பும், லேசான மனமும் , எதையும் எதிர்கொள்ளும் துணிவும் உள்ளவர்களுக்குத் தூக்கம் எட்டாக்கனி அல்ல; கிட்டா மருந்தல்ல.
*தூக்கம் நம்மை குளுமைப்படுத்தும் ஒரு மாமருந்து; புத்துணர்ச்சியைத் தரும் ஊக்க மருந்து.
*துன்பத்துள்தான் இன்பம் இருக்கிறது. எனவே துன்பத்தை எதிர்கொள்ள தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன்.
*இருட்டை நாம் குறை கூறுவதைவிட, ஆளுக்கு ஒரு சிமிழ் விளக்கை ஏற்றி ஒளி வீசச் செய்து இருட்டை விரட்டுவோம்.
*வாழ்வில், இல்லறத்தில் நாம் இருந்தாலும் அதிலுள்ள பல்வேறு சுமைகளை மறந்து, இன்பத்தில் திளைக்க உதவிடும் ஒரே அறம் தொண்டறம் ஆகும்.
*நாம் நண்பர்களைப் பகைவர்களாக்க அன்றாடம் முயலுவதைத் தவிர்த்துப் பகைவர்களையும் நண்பர்களாக்கிட முயல வேண்டும்.
*நகைச்சுவை உணர்வுடன் இருங்கள்; நகைச்சுவை உணர்வுதான் பல நேரங்களில் நம் உள்ளத்தில் பசுமையை வளர்க்கும்.
*ஒருவரின் திறமைக் குறைவை விட, நாணயக் குறைவே அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
*நாணயம் என்பது நம்மைப்பற்றிய உண்மைகளை நம்மிடம் (நம் உள்ளத்துள்ளும்) பிறரிடம் ஒளிக்காமல் சொல்வதே.
*நமக்கு நெருக்கடி, வீழ்ச்சி, தோல்வி வரும் போது யார் நம்முடன் மாறாமல் நிற்கிறார்களோ, அவர்களே தலைசிறந்த நண்பர்கள்.
*மூளைக்கும் உணவு தேவைதானே? சிந்தனையைக் கூர்மைப்படுத்த - சானை தீட்ட அறிவுள்ள நூல்களே தக்க உணவுகள் அதற்கு.
*மதுவும், சூதாட்டமும் மனிதர்களின் மானத்தையும், அறிவையும் பறிக்கும் கேடு கெட்ட நோய்கள் என்பதை உணருங்கள்.
*பணத்தை நமது பணியாளனாக நடத்துங்கள், ஒரு போதும் பணத்தை எஜமான் ஆக விடாதீர்.
*குழந்தைகளிடம் பாசத்தைக் கொட்டுங்கள். அன்பை மழையாகப் பெய்யுங்கள், அரவணைத்து முத்தம் கொடுங்கள்.
*செயல் என்ற காற்று, துயரத்தைத் துரத்தி அடித்து விரட்டும், மறவாதீர்.
*பணிகளைப் பகுத்துத் தொகுக்கும் முறையை வகுத்துக் கொள்ளுங்கள்.
*படித்தவர் எண்ணிக்கை பெருகிய அளவுக்குப் பண்பாளர்கள் எண்ணிக்கை பெருகவில்லையே.
*ஒருவரை நாம் அறிவாளியாகக் கருதுவதுகூட, உரையாடும் போது அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பொறுத்ததே.
*சிக்கலான பிரச்சனை வரும்போது சிங்கம்போல சிலிர்த்து எழுங்கள்! நரிகள் வளைகளைத் தேடுவது போல் ஓடாதீர்கள்!
*நம்மைப்பற்றி விமர்சனங்களை மற்றவர் செய்யும் போது, அது உண்மையாயிருந்தால் தாராள மனதோடு ஏற்றுத் திருத்திக்கொண்டு வாழ முயற்சியுங்கள்.
*எதையும் ஏற்றுப் பழகி, தீர்வு காணுவது எப்படி என்று திட சித்தத்துடன் அப்பிரச்சினையினை அலசி ஆராய்ந்தால், தீர்வு தென்பட்டே தீரும்.
*மனிதன் புகழ் ஆசை என்ற போதை ஏற ஏற மன நிறைவு கொள்ளத் தெரியாதவனாக ஆகிவிடுகிறான்.
*இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும்; புகழ் ஓட்டமும் அதுபோலத்தான், அதுதான் சீரிய உடல் நலத்திற்கு அடையாளம்.
*உங்களை ஒருவர் ஆத்திரமூட்டும் போதும், எரிச்சல் ஏற்படுத்தும் போதும் அதனை ஓர் அலட்சியப் புன்னகையோடு எதிர் கொள்ளுங்கள், அதற்குப் பதில் அளிக்காதீர்கள்; மதிப்பளிக்காதீர்கள்.
*இன்பத்தினை அடைய சிரிப்பு ஒரு திறவுகோல், அது மட்டுமல்ல, நம்மை மனிதம் மலர்ந்தவர்களாக காட்டிக் கொள்வதும் அச்சிரிப்புதான்.
*கடிகாரம் ஓடும் முன் ஓட பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்போம்.
"https://ta.wikiquote.org/wiki/கி._வீரமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது