பெ. சுந்தரம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"# அழுதீர் தொழுதீர் விடுவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:19, 26 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

  1. அழுதீர் தொழுதீர் விடுவீர் விடுவீர் வீணான விசனமே
  2. அன்பை அறியாது வாதிப்பவர் தன் தாயின் பாலையும் நஞ்சென சோதிப்பார்
  3. இம்மையில் தம்மை இயக்க இன்பம் தரும் ஒர் இலக்கு வேண்டும்
  4. இரவியைக் காண விளக்கின் உதவி எதற்கு
  5. உரிமைமேல் ஆண்மையில்லா சாந்தம் பெருமையில் பிணத்தில் பிறந்த சீதம்
  6. உள்ளமது கலங்காத ஊக்கமே ஒருவனது ஆக்கத்து அளவு
  7. எண்ணார் எண்ணித் துணிந்த பின் பண்ணார் தாமதம்
  8. ஒருவனது ஆசைப்பெருக்கால் வரும் துன்பம் கடலினும் பெரிதெ
  9. கருவியும் காலமும் அறிந்தால் அரியதென்னை
  10. கள்ள மனம் துள்ளும் தன்னுள்ளம் தனையே தின்னும்
  11. கொள்கையில் விலகாத நீதி உன்னிடமிருந்தால் வெற்றி நிச்சயமே
  12. சாத்தியம் அசாத்தியம் ஆய்ந்தறிந்து ஆற்றும் திறமுள்ள யாகமே யோகம்
  13. சிதைந்த போதும் உரம் உடையோர் பதையார் சிறிதும்
  14. தனக்கென வாழ்பவன் தனி மிருகம் அவன் மனம் மாறட்டும்
  15. தாய் முலைப்பாலிலும் நஞ்சுண்டு என ஆய்வாரே அற்பர்
  16. துறந்தாரும் முற்றும் துறந்தவரல்ல மறந்தார் சிற்சில்
  17. தொட்டே உணரும் தோல் பட்டே உணரும் முட்டாள்
  18. நம்புதல் என்பதுவே அன்பிள் வலிமை
  19. பற்பல அண்டம் வெடித்தடங்கிடும் தடுப்பவர் யார் விடுத்திடு வீன் விசனம்
  20. மூட்டிடில் தீயும் மூளூம் மும்மடங்காய்
  21. யாதே வரினும் மனவலி குன்றாதே மானமே பெரிது
  22. விதியெனப்பாவனை பண்ணிக்கடமையை விலக்குதல் மடமையே
  23. விரும்பி யாரும் உண்ணும் கரும்பு கசப்பது உன் வாயின் குற்றமே
  24. வெந்த புண் அதிலே வந்திடும் நூறடி
"https://ta.wikiquote.org/w/index.php?title=பெ._சுந்தரம்_பிள்ளை&oldid=6948" இலிருந்து மீள்விக்கப்பட்டது