பாலை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{விக்கிப்பீடியா|பாலை (தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 4:
கிமு. 3ஆம் நூற்றாண்டில் படம் தொடங்குகிறது. முதலில் ஆயர் என்னும் சங்ககால தமிழ் மக்களில் ஒரு குழுவினர் ஆய்க்குடி என்னும் வளமான ஊரில் வாழ்கின்றனர். வேற்று மொழி பேசும் வந்தேறி கூட்டமொன்று அவ்வூரில் உள்ள ஆயர்களில் பலரைக்கொன்று மீண்டவர்களை ஊரை விட்டு வெளியேற்றுகின்றனர். தப்பித்த ஆயர்கள் தங்களுக்கென முல்லைக்கொடி என்ற ஊரை உருவாக்கி வாழ்கின்றனர். அந்த ஊரில் பாலை என்னும் நில வறட்சிக்காலம் வரப்போவதாக அந்த ஊரைச்சேர்ந்த முதியவரும் கணியருமான பாலை முதுவன் கூறுகிறார். அந்த நில வறட்சிக்காலம் வந்தால் வேட்டையாடுதல், ஆநிரை மேய்த்தல், உழவு செய்தல், மீன் பிடித்தல் என நால்வகை திணைத்தொழில்களையும் செய்யாமல் பாலை நில மக்கள் செய்யும் களவு வேலை செய்தே பிழைக்க வேண்டும் என்று அவ்வூர் மக்களையும் தலைவனையும் எச்சரிக்கிறார் முதுவன். வரட்சி வருமோ என்று பயந்து முல்லைக்கொடி மக்கள் சிலர் ஆயக்குடியில் உள்ள வந்தேறி மக்களின் வணிகச்சாத்தனை கொல்கின்றனர். இது முல்லைக்கொடி தலைவனுக்கு தெரிய வர ஆயக்குடி வந்தேறிகளின் வணிகச்சாத்தனை கொன்றவர்களை கண்டித்ததுடன் வணிகச்சாத்தனின் பிணத்தை ஆயக்குடி வந்தேறிகளின் தலைவனிடம் அனுப்பி மன்னிப்பு கோருகிறார் முல்லைக்கொடித் தலைவன் விருத்திரன். மன்னித்து விட்டதாகக் கூறி நாடகமாடி இணக்கம் பேச வேறொரு இடத்துக்கு வருமாறு அழைத்து வணிகச்சாத்தனின் மீது வேலெறிந்து கொன்றவனை வணிகச்சாத்தனின் இணையாள் மூலமாகவே கொல்கிறான் வந்தேறிகளின் தலைவன் அரிமாவன். அதோடு நில்லாது முல்லைக்கொடியில் முக்கியமானவனான வளன் என்பவனை கடத்திக் கொடுமையும் செய்கிறான். தப்பித்த மற்றவர்கள் முல்லைக்கொடிக்கு செல்கின்றனர். வலனை மீட்பதற்கு விருத்திரன் தம் மக்களிடம் ஆய்க்குடி வந்தேறிகள் மீது போர் தொடுக்குமாறு கூறுகிறார். ஆனால் அவர்களை எதிர்க்க சில சூதான வழிகளை கையாள வேண்டும் என்கிறார் முன்னாள் முல்லைக்கொடி தலைவரும் விருத்திரனின் தந்தையுமான பாலை முதுவன். வலனை அவர்கள் கடத்தியதற்கு விருத்திரனின் கவனக் குறைவு தான் காரணம் என்கிறார் பாலை முதுவன். இதை பொருக்காத விருத்திரனின் துணைவியார் பாலை முதுவனிடம் கேள்வியை கேட்க அப்போது பேசப்படும் வசனம் தான் பின் வருவது.
 
== உரையாடல் ==
: '''விருத்திரனின் தலைவி''' - ''புடுங்கி வாழாம உழைத்து வாழ வேண்டும் என என் தலைவர் சொல்றார். அதில் என்ன குத்தத்த கண்டீங்க.''
: '''பாலை முதுவன்''' - ''என் பெயர் வெறும் முதுவன் அல்ல. பாலை முதுவன். பாலை முதுவன். ஏனென்றால் நான் பலையப் பார்த்தவன். நானும் என் தலைவி ஆதிமந்தியும் கூடிச் சிரித்து உடன்போக்கு சென்று கற்பு மணம் பூண்டு பிள்ளையை பெற்ற போது இதே முல்லை நிலத்தில் பாலை வந்தது. பாலை வந்தது.''
 
''வெப்பம் சுட்டெறிச்சுது. புல் பூண்டுகள் கருகிப் போச்சு. ஆநிரைகள் நாவிழந்து மடிஞ்சி போச்சு. என்ற புள்ளைங்க பாலுக்கு ஏங்கி அழும். அவ தாய் முலவத்தி சுருண்டு கிடக்கும். என்ற புள்ள அவ தாய் முலய போயி சவச்சுப் பாப்பான். அங்க ஒன்னும் வராது. ஒன்னும் வராது.''
 
''குடிக்க நீரில்ல. மக்கள் மாண்டு விழுந்துச்சு. ஒருநாள் என்ற பிள்ளை வீதிக்கு ஓடி வந்து மண்ணத் தின்னான். நாங்க ஓடிப் போயி பாக்கேயில வயிறு வீங்கி செத்துப் போயிட்டான். என்ற மூத்த புள்ள வயிறு வீங்கி செத்துப் போயிட்டான். மண் தின்னு செத்தான் என் மூத்த பிள்ள. அது தான் மக்களே பாலை. அதுதான் மக்களே பாலை.''
 
''நானும் துவண்டு போகல. ஆநிரை மேய்த்த ஆயன் ஆரலைக் கள்வனானேன். பாலை மறவன் ஆனேன். ஒரு வண்டியும் விடல. மறிச்சேன். பறிச்சேன். குடிகளுக்கு கொடுத்தேன். மறு மழை வர ஏழு ஆண்டுகள் ஆச்சு. அதுவர பாலை நிலத்துல மறவனா வாழ்ந்தேன். பாலை நிலத்துல மறவனா வாழ்ந்தேன். விருத்திரனும் தான்''
 
''குறிஞ்சி நிலத்தில் வேட்டையாடனும். முல்லை நிலத்தில் ஆநிரை மேய்க்கனும். மருத நிலத்தில் உழவு செய்யனும். நெய்தல் நிலத்தில் மீன் பிடிக்கனும். பாலை நிலத்தில் கொள்ளை தானய்யா அடிக்கோனும்.''
"https://ta.wikiquote.org/wiki/பாலை_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது