தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 452:
சு, சூ
 
* சுக துக்கம் சுழல் சக்கரம்.
* சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
* சுட்ட சட்டி அறியுமா சுவை.
* சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
* சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.
* சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
* சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
* சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே
* சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
* சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
* சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
* சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
* சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.
* சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.
 
 
செ, சே, சை
 
* செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
* செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
* செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?
* செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
* செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
* செயவன திருந்தச் செய்.
* செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
* செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
* செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
* சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
* சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
* சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
* சேற்றிலே செந்தாமரை போல.
* சைகை அறியாதவன் சற்றும் அறியான்.
 
 
சொ, சோ
 
* சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
* சொல் அம்போ வில் அம்போ?
* சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
* சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
* சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
* சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
* சொல்வல்லவனை வெல்லல் அரிது.
* சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
* சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
* சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
* சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
* சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..
* சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.
 
 
 
* தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
* தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
* தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
* தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
* தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
* தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
* தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
* தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
* தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
* தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
* தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
* தருமம் தலைகாக்கும்.
* தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
* தலை இருக்க வால் ஆடலாமா ?
* தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
* தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
* தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
* தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
* தவளை தன் வாயாற் கெடும்.
* தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.
 
 
 
* நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.
* நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.
* நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
* நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !
* நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.
* நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்
* நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.
* நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
* நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
* நயத்திலாகிறது பயத்திலாகாது.
* நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
* நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
* நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.
* நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்.
* நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.
* நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?
* நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.
* நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
* நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.
 
 
நா
 
* நா அசைய நாடு அசையும்.
* நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
* நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ?
* நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.
* நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.
* நாய் இருக்கிற சண்டை உண்டு.
* நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை.
* நாய் விற்ற காசு குரைக்குமா?
* நாலாறு கூடினால் பாலாறு.
* நாள் செய்வது நல்லார் செய்யார்.
* நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.
* நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.
 
 
நி, நீ
 
* நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
* நித்திய கண்டம் பூரண ஆயிசு.
* நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?
* நித்திரை சுகம் அறியாது.
* நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
* நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.
* நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.
* நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.
* நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.
* நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
* நீர் மேல் எழுத்து போல்.
* நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
* நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.
 
 
நு, நூ, நெ, நே, நை, நொ, நோ
 
* நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
* நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.
* நூல் கற்றவனே மேலவன்.
* நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
* நூற்றைக் கொடுத்தது குறுணி.
* நெய் முந்தியோ திரி முந்தியோ.
* நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
* நெருப்பு என்றால் வாய்வெந்து போமா?
* நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?
* நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.
* நேற்று உள்ளார் இன்று இல்லை.
* நைடதம் புலவர்க்கு ஒளடதம்.
* நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
* நொறுங்கத் தின்றால் நூறு வயது.
* நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.
* நோய் கொண்டார் பேய் கொண்டார்.
* நோய்க்கு இடம் கொடேல்.
 
 
 
* பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
* பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.
* பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
* பக்கச் சொல் பதினாயிரம்.
* பசியுள்ளவன் ருசி அறியான்.
* பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்
* பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.
* பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
* பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
* படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
* படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
* படையிருந்தால் அரணில்லை.
* படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
* பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
* பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
* பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
* பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
* பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
* பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
* பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.
* பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
* பணம் உண்டானால் மணம் உண்டு.
* பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
* பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
* பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
* பதறாத காரியம் சிதறாது.
* பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
* பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
* பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
* பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
* பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
* பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
* பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
* பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
* பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
* பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.
* பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
* பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
* பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
* பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
* பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
* பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
* பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
* பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
* பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.
 
 
பு, பூ
 
* புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
* புத்திமான் பலவான்.
* புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
* புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
* பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
* பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
* பூவிற்றகாசு மணக்குமா?
* பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
 
 
பெ, பே
 
* பெண் என்றால் பேயும் இரங்கும்.
* பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
* பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
* பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
* பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
* பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
* பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
* பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
* பேசப் பேச மாசு அறும்.
* பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
* பேராசை பெருநட்டம்.
* பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்
 
 
பொ, போ
 
* பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
* பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
* பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
* பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.
* பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
* பொறுமை கடலினும் பெரிது.
* பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
* பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
* போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
* போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
* போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.
 
 
 
* மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கனும்.
* மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
* மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
* மண் குதிர்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
* மண்டையுள்ள வரை சளி போகாது.
* மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
* மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
* மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
* மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.
* மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
* மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
* மருந்தே யாயினும் விருந்தோடு உண்.
* மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.
* மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
* மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
* மவுனம் கலக நாசம்
* மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.
* மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
* மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.
* மனமுரண்டிற்கு மருந்தில்லை.
* மனம் உண்டானால் இடம் உண்டு.
* மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
* மனம் போல வாழ்வு.
* மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி.
* மண்னுயிரை தன்னுயிர்போல் நினை.
 
 
மா
 
* மாடம் இடிந்தால் கூடம்.
* மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
* மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?
* மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.
* மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
* மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
* மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
* மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.
* மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
* மாரடித்த கூலி மடி மேலே.
* மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
* மாரி யல்லது காரியம் இல்லை.
* மாவுக்குத் தக்க பணியாரம்.
* மாற்றானுக்கு இடங் கொடேல்.
* மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
* மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.
 
 
மி, மீ, மு, மூ
 
* மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
* மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
* மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
* மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
* மீ தூண் விரும்பேல்.
* முகத்துக்கு முகம் கண்ணாடி
* முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
* முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
* முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா
* முதல் கோணல் முற்றுங் கோணல்
* முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.
* முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
* முருங்கை பருத்தால் தூணாகுமா?
* முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.
* முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
* முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
* முன் ஏர் போன வழிப் பின் ஏர்
* முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
* முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
* முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
* முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்
* முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு
* மூட கூட்டுறவு முழுதும் அபாயம்.
* மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.
 
 
மெ, மே, மொ, மோ,மெள
 
* மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
* மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.
* மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்
* மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.
* மொழி தப்பினவன் வழி தப்பினவன்
* மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.
* மெளனம் மலையைச் சாதிக்கும்.
 
வ, வா, வி
 
* வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
* வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
* வடக்கே கருத்தால் மழை வரும்.
* வட்டி ஆசை முதலுக்கு கேடு.
* வணங்கின முள் பிழைக்கும்.
* வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
* வருந்தினால் வாராதது இல்லை.
* வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
* வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
* வளவனாயினும் அளவறிந் தளித்துண்
* வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
* வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்
* வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
* வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
* வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
* வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
* வாழ்வும் தாழ்வும் சில காலம்.
* விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
* விதி எப்படியோ மதி அப்படி.
* வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
* விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
* விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
* வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
* விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
* விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
* விளையும் பயிர் முளையிலே தெரியும்.
* வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்
 
--[[பயனர்:Bavithay|பவித்தா]] 14:2848, 3 மார்ச் 2009 (UTC)
"https://ta.wikiquote.org/wiki/தமிழ்ப்_பழமொழிகளும்_சொலவடைகளும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது