மா. இராசமாணிக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:வரலாற்றாய்வாளர்கள் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
 
வரிசை 6:
== நபர் குறித்த மேற்கோள்கள் ==
===[[நெ. து. சுந்தரவடிவேலு]]வின் கருத்துகள்===
"இவரோ பிழைக்கப் பிறந்தவர் அல்லர்; உழைக்கப் பிறந்தவர். தமிழ்த் தொண்டாற்ற வாழ்ந்தவர். நேரமிருந்ததால் வாய்ப்பினைப் பயன்படுத்தினார்.
எதிர் நீச்சலிட்டு தம்மை வளர்த்துக் கொண்டாற்போலவே தமிழ்ச் சமுதாயத்தையும் வளர்க்கப் பாடுபட்டவர் இராசமாணிக்கனார் என்றும் காக்கை பிடிக்கத் தெரியாத உண்மைத் தமிழராக இருந்த காரணத்தால் ரீடர் பதவியிலேயே இருந்தார் என்றும் இதனை தமிழ்ச் சமுதாயத்திற்குக் களங்கமாகவும் தாம் சிரமப்பட்டு எழுதிய பத்துப்பாட்டு உரையை வெளியிட வேண்டி தாம் பணியாற்றிய சென்னைப் பல்கலைக் கழகத்திடம் ஒப்படைத்ததற்கு பதில் இராசமாணிக்கனாரே வெளியிட்டிருந்தால் பணமாவது கிடைத்திருக்கும் என்றும் சென்னைப் பல்கலைக் கழகம் இவர் எழுதிய பத்துப்பாட்டு உரை நூலை யாரும் காணாத வண்ணம் பூட்டி வைத்து விட்டது என்றும் பிறகு பதவியிலிருக்கும் போதே இராசமாணிக்கனார் மாரடைப்பால் இறந்தார் என்றும் குறிப்பிடுகின்றார்.<ref>{{cite book | title=நினைவு அலைகள், பாகம் 1 | publisher=சாந்தா பதிப்பகம் | author=டாக்டர் [[நெ. து. சுந்தரவடிவேலு]] | pages=18}}</ref>
 
'பத்துப்பாட்டு' என்னும் பண்டை இலக்கியத்திற்கு உரை எழுதினார். பாடுபட்டு எழுதினார். பாடுபட்டு எழுதிய விரிவுரையை வெளியிட வேண்டி, அதைச் சென்னைப் பல்கலைக் கழகத்திடம் ஒப்படைத்தார். இந்த அப்பாவி மனிதர்.
 
பல்கலைக் கழகத்தின் நேரத்தில் சொந்த வேலையைக் கவனித் திருக்கலாம். எழுதிவிட்டதை, வெளியார் வழியாக, வெளியிட்டிருந்தால் ஏதோ நாலு பணம் கிடைத்திருக்கும்.
 
அதை அறியாது, பல்கலைக் கழகத்திடம் தம் உரையைக் கொடுத்து விட்டார். பல்கலைக் கழகம் காவல் கழகமாகச் செயலாற்றியது. டாக்டர் பட்டங்களுக்காக அனுப்பப்படும் ஆய்வுரைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, பாதுகாப்பாகப் பூட்டி வைத்துவிட்டு அவற்றை வெளியிட முன்வராது.
 
இராசமாணிக்கனார் எழுதியதை யாரும் காணாதபடி பூட்டி வைத்துவிட்டது. வெளிவராது என்பது அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்ததோ இல்லையோ, எனக்குத் தெரியாது. பதவியில் இருக்கும் போதே மாரடைப்பால் மாண்டார் என்பது மட்டும் எல்லாருக்கும் தெரிந்ததே.
 
தம்மை வளர்த்துக் கொள்ளப் பாடுபட்டதைப் போல் தமிழ்ச் சமுதாயத்தை வளர்க்கவும் பாடுபட்டார். எதிர் நீச்சலில், தம் முயற்சியால் தமிழ் இலக்கியக் கடலில் நீந்திக் கரைசேர்ந்த, காக்கை பிடிக்கத் தெரியாத உண்மைத் தமிழரை ரீடராகவே மாளவிட்டது நம் சமுதாயத்திற்குக் களங்கம்."<ref>{{cite book | url=https://ta.wikisource.org/s/2x51 | title=நினைவு அலைகள், பாகம் 1 | publisher=சாந்தா பதிப்பகம் | author=டாக்டர் [[நெ. து. சுந்தரவடிவேலு]] | pages=18}}</ref>
 
== வெளியிணைப்புக்கள் ==
"https://ta.wikiquote.org/wiki/மா._இராசமாணிக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது