ஆசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
* உள்ளத்தின் உறுதியோடு கொள்ளும் நியாயமான ஆசை காலப்போக்கில் நிறைவேறாமல் போகாது. - '''[[விளாதிமிர் லெனின்]]'''
* எந்தப் பொருளின் மீது ஆசை இல்லையோ அவற்றினால் துன்பம் இல்லை. - '''[[ஔவையார்]]'''
* ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது. தீர்த்து வைக்கவும் முடியாது. - '''ஸீஸெரோ'''<ref name=ஆசை>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/84| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=83-85}}</ref>
* ஆசைகளைக் குறைத்துக்கொள்வதிலேயே அமைதி இருக்கின்றது. அவைகளைத் திருப்தி செய்வதிலன்று-'''.ஹீபர்'''<ref name=ஆசை/>
* ஒரு மனிதனுடைய ஆசைகள் எல்லையற்றவைகளாக இருந்தால், அவனுடைய முயற்சிகளும் எல்லையற்றவைகளாக ஆகிவிடும். - '''பால்கி'''<ref name=ஆசை/>
* நம்முடைய தற்போதைய நிலைக்குத் தக்கபடி நாம் நம் ஆசைகளைச் சுருக்கிக் கொள்ள வேண்டும். இது வாழ்க்கையின் அவசியமான ஒரு விதியாகும். எதிர்பார்ப்பவைகள் எப்படியிருப்பினும் நம்மிடம் உள்ளவைகளுக்குத் தக்கபடி நாம் வாழ்ந்து வர வேண்டும். -'''அடிஸன்'''<ref name=ஆசை/>
* முறையற்ற ஆசைகள் பூர்த்தியான பிறகு தண்டனைை அனுபவிக்கிறோம். நிறைவேற முடியாத ஆசைகள் தோன்றுபோதே தண்டனையும் வந்துவிடுகின்றது. - '''ஸவிப்ர் ஃயிஸிட்ஸ்'''<ref name=ஆசை/>
* நாம் எவ்வளவு செல்வம் பெற்றிருப்பினும், எவ்வளவு உயர்ந் பதவியிலிருப்பினும், குறைவாகத் தோன்றும் நம் செல்வத்தை நிறைவுபடுத்தப் பெயரில்லாத ஏதோ ஒன்று மேலும் தேவையாகத் தோன்றுகின்றது. -'''ஹொரேவி'''<ref name=ஆசை/>
* ஆசைகளும் உணர்ச்சிகளும் ஒரு கயிற்றின் இரண்டு பிரிகளைப் போல, ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு இதயத்தைச் சுற்றி இறுக்கமாகப் பிணைந்துகொள்கின்றன நாம் அவைகளை நிதானமாகப் பயன்படுத்திக்கொண்டால் நன்மை விளையும், அளவுக்கு அதிகமானால் அழிவு நிச்சயமாகிவிடும். -'''பர்டன்'''<ref name=ஆசை/>
* ஆசைகளை அறவே அவித்துவிட்டால், மனமும் அவிந்துவிடும். உணர்ச்சிகளே இல்லாத மனிதன் செயலுக்குரிய தூண்டுகோலோ, தத்துவமோ இல்லாமல் போய் விடுவான். - '''ஹெல்விடியா'''<ref name=ஆசை/>
* நம் ஆசைகளை வெட்டிக் குறைத்துக்கொண்டு. நடுநிலையான முறைகளால், சில ஆசைகளை மட்டும் நிறைவேற்றி கொள்ளல் என்பது, செருப்புகள் தேவை என்பதற்காகக்காக, பாதங்களையே வெட்டிவிடுவது போலாகும். -'''ஸ்விஃப்'''<ref name=ஆசை/>
* அவசியம் என்பது முடிவடையும் பொழுது. ஆசையும் மேலும் அறியவேண்டுமென்ற துடிப்பும் தொடங்குகின்றன. இயற்கையின் தேவையை அனுசரித்து நமக்கு வேண்டியன யாவும் கிடைத்துவிட்ட பிறகு, என்னென்ன வேண்டும் என்ற செயற்கையாக ஆசைகளை வளர்த்துக் கொள்கிறோம். -'''ஜான்ஸ்'''<ref name=ஆசை/>
* அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம். - '''திருவள்ளுவர்'''<ref name=ஆசை/>
* தூஉய்மை என்பது அவா இன்மை. - '''திருவள்ளுவர்'''<ref name=ஆசை/>
* குருடனைக்காட்டிலும் குருடன் எவன்? ஆசையுள்ளவன். - '''ஆதிசங்கரர்''' <ref name=ஆசை/>
* ஆசையற்றவனே அகில உலகிலும் மிகப்பெரும் பணக்காரன். - '''சுவாமி சிவானந்தர்'''<ref name=ஆசை/>
* அவாவினால் உந்தப்பட்ட மனிதர்கள். வேட்டையில் விரட்டப்பட்ட முயலைப் போல், ஓடித் திரிகிறார்கள். ஆதலால், மோக பந்தங்களிலிருந்து விடுதலை பெற விரும்பும் பிக்கு அவாவை ஒழிப்பானாக. - '''புத்தர்'''<ref name=ஆசை/>
 
== பழமொழிகள் ==
"https://ta.wikiquote.org/wiki/ஆசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது