யுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
* எந்தப் போரிலும் முதலில் கொல்லப்படுவது உண்மை.
 
* கடைசி நாட்களில் இப்படி நடக்கும்: யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாய் நிலைநிறுத்தப்படும். எல்லா குன்றுகளுக்கும் மேலாக அது உயர்த்தப்படும். எல்லா தேசத்து ஜனங்களும் அங்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள். அங்கே வருகிற பலதரப்பட்ட ஜனங்கள் மற்றவர்களைப் பார்த்து, “வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்குப் போகலாம். யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்குப் போகலாம். அவர் தன்னுடைய வழிகளை நமக்குக் கற்றுக்கொடுப்பார். நாம் அவர் பாதைகளில் நடப்போம்” என்று சொல்வார்கள். ஏனென்றால், சீயோனிலிருந்து சட்டமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் புறப்படும். ஜனங்களுக்கு அவர் தீர்ப்பு கொடுப்பார். பலதரப்பட்ட ஜனங்களின் விவகாரங்களைச் சரிசெய்வார். அவர்கள் தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள். ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பார்கள். ஒரு ஜனத்துக்கு எதிராக இன்னொரு ஜனம் வாள் எடுக்காது. போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள். - '''ஏசாயா''' [https://www.jw.org/ta/வெளியீடுகள்/பைபிள்/nwt/புத்தகங்கள்/ஏசாயா/2/ ஏசாயா 2:2-4]
 
* ஒரே நேரத்தில் போருக்கும் நாகரிக வாழ்வுக்கும் செலவிட, எந்த ஒரு நாடும் வசதி படைத்தது அல்ல. எதாவது ஒன்றைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும், இரண்டையும் நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது.
 
* அமைதியை அடைவதற்காக இந்த மண்ணில் எத்தனையோ போர்கள் நடந்துள்ளன.
 
* மனிதர்கள் செத்துக் கொண்டிருக்கும்போது, பதக்கங்களால் என்ன பயன்? என்னுடைய நோபல் பதக்கங்களையும் போர் நிதிக்குக் கொடுத்துவிட்டேன்.- '''மேரி கியூரி'''
 
* பூமி ஓர் அற்புதமான கிரகம், ஆண்களின் பேராசையாலும், அதிகாரப் போட்டியாலும் போர்கள் மூலம் அழிக்கப்பட்டு வருகிறது.-'''ஆலிஸ் வாக்கர்'''
 
* வலுவான நிலையில் இருக்கும் ஒரு நாடு, பிற நாடுகளின் மீது எந்தக் காரணத்தைச் சொல்லிக்கொண்டும் போரில் இறங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. போர் என்பது வல்லரசுகள் நிகழ்த்தும் ஆயுத வணிகம். மனித வாழ்வில் மோசமான நிகழ்வு.- '''ஜோடி வில்லியம்ஸ்'''
 
* போரினால் களைத்துவிட்டோம், ஓடுவதில் களைத்துவிட்டோம், உணவு கேட்டுக் களைத்துவிட்டோம், பாலியல் பலாத்காரங்களைக் கண்டு களைத்துவிட்டோம் எதிர்கால குழந்தைகளாவது போர்களற்ற உலகில் வாழ வேண்டுமானால் பெண்களே ஒன்று சேர்வோம் போராடுவோம்.- '''லேமா குபோவீ'''
 
* இனத்தின் பெயரால் எந்த மனிதரும் இனி சாகக்கூடாது, எந்தக் காரணத்துக்காகவும் இந்தப் பூமியில் போர் நிகழக்கூடாது போர்களில் உயிர் இழந்த கடைசி மனிதர்களாக நாங்கள் இருக்க வேண்டும்.- '''ஆன் பிராங்க்'''
 
* இரண்டாம் உலகப் போர் கொடூரமானது, நீண்ட போர் மனதை காயப்படுத்திவிட்டது. என்னால் இட்லரின் செயல்களை தடுத்து நிறுத்த இயலவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்காவது உதவ இயன்றதே.-'''எமிலி கிரீன் பால்ச்'''
 
* வியட்நாம் போருக்கு அமெரிக்கா ஆதரவு அளித்ததை எதிர்த்து வரி கட்டமறுத்த என்னைக் கைது செய்தனர். அமைதியைத் தொந்தரவு செய்ததற்காக நான் சிறை சென்றேன். உண்மையில் நான் போரைத்தான் தொந்தரவு செய்தேன்.-'''ஜோன் பயாஸ்'''
 
* இரண்டாம் உலகப்போருக்குப் பின், மனித இனம் பாடம் கற்றுக்கொண்டிருக்கும் என நினைத்தேன், ஆனால் போர்களைத் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையானது. அன்பும் சகிப்புத்தன்மையும் பணிவும் இருந்தால் இந்த உலகம் மேன்மையடையும்.-'''ஐரெனா செண்டலர்'''
 
* வலுவான நிலையில் இருக்கும் ஒரு நாடு, பிற நாடுகளின் மீது எந்தக் காரணத்தைச் சொல்லிக்கொண்டும் போரில் இறங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. போர் என்பது வல்லரசுகள் நிகழ்த்தும் ஆயுத வணிகம். மனித வாழ்வில் மோசமான நிகழ்வு. [[ஜோடி வில்லியம்ஸ்]]<ref>தி இந்து, பெண் இன்று இணைப்பு 2016 அக்டோபர் 16</ref>
 
* பழைய காலத்தில் பைத்தியக்காரர்களைக் குளு குளு தண்ணீரில் குளிக்கச் செய்வது வழக்கம். அதேபோல் செய்தால்தான் இப்போது இருக்கும் யுத்த வெறியர்களின் பைத்தியக்காரத்தனம் நீங்கும். [[நிக்கிட்டா குருசேவ்]]-(26 - 6 - 1960)<ref name=சொன்னார்கள்61-70>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_61-70| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=61-70}}</ref>
 
* துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை ஒழிக்க முடியும், துப்பாக்கியை ஒழிக்க வேண்டுமானல் முதலில் அதனை நம் கைகளில் பிடிக்க வேண்டும். —[[மா சே துங்]] (1936)<ref name=சொன்னார்கள்61-70/>
 
* உடல் வலிமையை நம்பிப் போர் செய்தவன் கல்லை எடுத்தவனுக்கு தோற்றான். கல்லை நம்பியவன் வில்லை எடுத்தவனுக்குத் தோற்றான்; வில் வாளுக்குத் தோற்றது; வாள் பீரங்கி துப்பாக்கிக்குத் தோற்றது. வெடிகுண்டு அணு குண்டுக்குத் தோற்றது. இனிமேல் அதுவும் அறிவுக்குத் தோற்றுவிடும்! —டாக்டர் [[மு. வரதராசனார்]] (1962)<ref name=சொன்னார்கள்101-101>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_101-110| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=101-110}}</ref>
 
* உண்மையான தேசப்பற்று என்பது முதலில் ஒட்டுமொத்த தேசத்தின் ஆரோக்கியத்தை காப்பதில் பெருமை கொள்வதே ஆகும். அதன்பின்தான் பொருளாதாரமும், பாதுகாப்புத் துறையும் இருக்க வேண்டும். உடல்நலத்திலும், சுகாதாரத்திலும் அக்கறை இல்லாத [[நாடு]], நமது ராணுவத்தின் வீரத்தையும், ஆற்றலையும் காட்டி போருக்கு தயார் என்று அறை கூவுவது [[கொலை]] குற்றத்துக்கு சமம். -[[கமல்ஹாசன்]]<ref name=கரோனா>{{cite web | url=https://www.hindutamil.in/news/tamilnadu/550403-new-india-after-coronavirus-pandemic-1.html | title=கரோனா வைரஸ் தொற்றை முறியடித்த பின்னர் இந்தியாவை புனரமைப்பது எப்படி? | date=20 ஏப்ரல் 2020 | accessdate=20 ஏபரல் 2020}}</ref>
** [[கொரோனாவைரசு|கரோனா]] ஊரடங்கின்போது கமல் வெளியிட்ட அறிக்கை
==குறிப்புகள்==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/யுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது