அதிர்ஷ்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
* அதிர்ஷ்ட தேவியின் குன்றின்மேல் இறக்கிவிடப்படுவதில் என்ன பெருமை உண்டு? சகல பெருமையும் அதில் ஏறிச் செல்வதிலேயே. -'''நெளல்ஸ்'''<ref name=அதிர்ஷ்டம்/>
 
* அதிர்ஷ்டங்களை உண்டாக்கிக்கொள்வது நாம், ஆனால், அதை விதி என்று சொல்லுகிறோம். - '''ஆவ்ராய்'''<ref name=நல்வாப்பு>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/22| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=-20-21}}</ref>
 
* அதிருஷ்ட சக்கரம் இடைவிடாமல் சுற்றிக்கொண்டேயிருக்கின்றது. இன்று நான் மேலே வந்துவிடுவேன் என்று எவன் சொல்லிக்கொள்ள முடியும்? - [[கான்பூசியசு|கன்ஃபூஷியஸ்]]<ref name=நல்வாப்பு/>
 
* மானிட வாழ்க்கை பகுத்தறிவைக்காட்டிலும் அதிருஷ்டத் தாலேயே ஆளப்பெறுகின்றது. - '''ஹியூம்'''<ref name=நல்வாப்பு/>
 
* அதிர்ஷ்டம் மனிதர்களை மாற்றுவதில்லை. அவர்களை வெளிப்படையாகத் தெரியும்படி திறந்து காட்டுகிறது. - '''ரிக்கோபோனி'''<ref name=நல்வாப்பு/>
 
* ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விைலும் அதிர்ஷ்டம் வந்து ஒரு முறை கதவைத் தட்டும். ஆனால், பல சந்தர்ப்பங்களில் மனிதன் அப்பொழுது பக்கத்தில் வெளியே எங்காவது போயிருப்பான். அது தட்டுவது அவன் காதில் விழுவதில்லை. - '''மார்க் டுவெயின்'''<ref name=நல்வாப்பு/>
 
* உண்மையில் எது நல்லதிருஷ்டம், எது துரதிருஷ்டம் என்பது நமக்குத் தெரியாது. - '''ரூஸோ'''<ref name=நல்வாப்பு/>
 
* நல்லவர்களுடைய துரதிருஷ்டம் அவர்களை வானைநோக்கி முகங்களைத் திருப்பும்படி செய்கின்றது. கெட்டவர்களுடைய துரதிருஷ்டம் அவர்கள் தரையை நோக்கித் தலைகளைத் தொங்கவிட்டுக்கொள்ளும்படி செய்கின்றது. - '''ஸாஅதி'''<ref name=நல்வாப்பு/>
 
* அதிர்ஷ்டம் மெலிந்தவர்களைத் தண்டிக்கும் தடி: தைரியமுள்ளவர்களுக்கு அது ஊன்றுகோல். - '''லோவெல்'''<ref name=நல்வாப்பு/>
 
* அதிர்ஷ்டத்தை நம்பியிருக்க வேண்டாம் ஒழுக்கத்தை நம்பியிருங்கள். - '''பப்ளியஸ் ஸிரஸ்'''<ref name=நல்வாப்பு/>
 
* தானே தன் நிலைமையைச் செம்மைப்படுத்திக்கொள்ளும் பொறுப்பு ஒருவனுக்கு ஏற்பட்டால், அதுவே அவன் அதிருஷ்டத்தின் மடியில் தவழ்வதாகும். அப்பொழுதுதான் நம் அறிவு ஆற்றல்களெல்லாம் வளர்ச்சியடைந்து முன்பு கண்டிராத அளவுக்கு வலிமை பெறுகின்றன. - '''பிராங்லின்'''<ref name=நல்வாப்பு/>
 
* அநேகருக்கு அதிருஷ்டம், அளவுக்கு அதிகமாய்க் கொடுக்கின்றது. ஆனால், எவருக்கும் போதிய அளவு அளிப்பதில்லை. - '''மார்ஷியல்'''<ref name=நல்வாப்பு/>
 
* அதிருஷ்டம் எப்பொழுதும் சுறுசுறுப்பைத் தொடர்ந்தே சென்றுகொண்டிருப்பதைக் காணலாம். - '''கோல்ட் ஸ்மித்'''<ref name=நல்வாப்பு/>
 
* துயரப்படுவோர்தாம் அதிருஷ்டத்தின் ஆற்றலை ஒப்புக் கொள்வர். இன்பமாயிருப்பவர்கள் தங்களுடைய வெற்றிகளுக்குத் தங்கள் முன்யோசனையும் தகுதியுமே காரணங்கள் என்பர். -'''ஸ்விஃப்ட்'''<ref name=நல்வாப்பு/>
 
* அதிகாலையில் எழுந்திருந்து கடுமையாக உழைத்து முன் யோசனையுடன் நடந்துகொள்ளும் மனிதன் தன் வருமானத்தில் கவனமுள்ளவனாகவும், கண்டிப்பான ஒழுக்க முடையவனாகவும் இருந்தால் அவன் துரதிருஷ்டம்பற்றிக் குறை சொல்வதை நான் கண்டதேயில்லை. நல்ல ஒழுக்கம், நல்ல பழக்கங்கள். இடைவிடாத ஊக்கம் ஆகியவைகளில் அமைந்த கோட்டைக்குள் துரதிருஷ்டம் செல்ல முடியாது. மூடர்களே துரதிருஷ்டம்பற்றிக் கனவு காண்பார்கள். - '''அடிஸன்'''<ref name=நல்வாப்பு/>
 
* வாழ்க்கையில் வெற்றியடைந்த மனிதர் அனைவரும் காரண காரிய இயல்பை நம்புபவர் எந்த விஷயமும் அதிருஷ்டத்தால் நேரிடுவதில்லை. நியதியின்படியே நிகழ்கின்றது என்று அவர்கள் நம்புகின்றனர். சங்கிலியின் முதலாவது கண்ணியிலிருந்து கடைசிக் கண்ணிவரை எதுவும் பலவீனமாகவோ, அறுந்தோ இருக்கவில்லை என்றும் அவர்கள் நம்புகின்றனர். அதுவே காரண காரியத் தொடர்பு. - '''எமர்ஸன்'''<ref name=நல்வாப்பு/>
 
* ஏதாவது ஏற்படும் என்று அதிருஷ்டம் எப்பொழுதும் காத்துக் கொண்டேயிருக்கின்றது. உழைப்பு. கூர்மையான பார்வையுடனும் உறுதியான உள்ளத்துடனும் எதையாவது உற்பத்தி செய்யும். அதிருஷ்டம். கட்டிலில் படுத்துக்கொண்டு, தனக்கு ஏதாவது சொத்து வந்து சேர்ந்ததாகத் தபால்காரர் கடிதம் கொண்டுவருவார் என்று எதிர்பார்த்திருக்கும். உழைப்பு. காலை ஆறுமணிக்கே எழுந்து ஊக்கமுள்ள பேனாவாலோ, 'டனார். டணார்' என்று ஒலிக்கும் சம்மட்டியாலோ தனக்கு வேண்டியதைத் தேடிக்கொள்ளும். அதிருஷ்டம், நொந்து அழும். உழைப்பு. சீட்டியடித்துக்கொண்டு உல்லாசமாயிருக்கும். அதிருஷ்டம், தற்செயலாக நன்மை வரும் என்று நம்பும். உழைப்பு. ஒழுக்கத்தையே நம்பியிருக்கும். - '''காப்டென்'''<ref name=நல்வாப்பு/>
 
* அதிருஷ்டமில்லாத இடத்திலோ, ஆளிடமோ நெருங்க வேண்டாம். மிகவும் சாமர்த்தியசாலிகளான பலரை எனக்குத் தெரியும். அவர்களுடைய கால்களுக்குக்கூடச் செருப்புக் கிடைப்பதில்லை. நான் அவர்களுடன் சேருவதில்லை. அவர்களுடைய ஆலோசனை நல்லதாகத்தான் தோன்றும் ஆனால், அவர்கள் தாங்களே முன்னேற முடியவில்லை. தங்களுக்குத் தாங்களே நன்மை செய்துகொள்ள முடியாதவர்கள் எனக்கு என்ன நன்மை செய்யப் போகின்றனர்? - '''ராத்ஸ்சைல்டு'''
 
* ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா <br>ஊக்க முடையான் உழை. - [[திருவள்ளுவர்]]<ref name=நல்வாப்பு/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/அதிர்ஷ்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது