அறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:திறமைகள் நீக்கப்பட்டது; பகுப்பு:கருப்பொருட்கள் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
=== [[கார்ல் மார்க்ஸ்]] ===
*உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.
=== [[வில்லியம் ஷேக்ஸ்பியர்]] ===
* 'அறிவு'-ஆம், அது நாம் வானுலகு ஏறுதற்குரிய வன் சிறகு.
* அறியாமை ஆண்டவன் சாபம், அறிவு தேவர் உலகத்திற்குக் கொண்டு செல்லும் சிறகு.
=== பிறர் ===
* கடவுள் ஆலோசிப்பவன் ஒருவனை உலகிற்கு அனுப்பினால், ஜாக்கிரதை அப்பொழுது அனைத்தும் அபாய நிலை அடையும்! - '''எமர்ஸன்'''
* எல்லா உடைமைகளிலும் ஞானமே அழியாததாகும். - '''[[சாக்கிரட்டீசு]]'''
* சாத்தானுக்குச் சிந்தனை செய்பவனைப் போன்ற கொடிய சத்துரு கிடையான். -'''கார்லைல்'''
* நூலறிவு பேசும் - மெய்யறிவு கேட்கும். -'''ஹோம்ஸ்'''
* ஞானத்தின் முதல் வேலை தன்னை அறிதல்; அன்பின் முதல் வேலை தனக்குத் தான் போதுமானதாயிருத்தல். -'''ரஸ்கின்'''
* நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் அவனியில் கிடையாது. -'''கதே'''
* மனோ விகாரங்களே வாழ்வாகிய கப்பலைச் செலுத்தும் காற்று. அறிவே அதை நடத்தும் சுக்கான். காற்றின்றேல் கப்பல் நின்றுவிடும். சுக்கானின்றேல் தரை தட்டிவிடும். -'''ஷூல்ஜ்'''
* வாழ்வு யோசிப்பவனுக்கு இன்ப நாடகம், உணர்பவனுக்குத் துன்ப நாடகம். -'''வால்ப்போல்'''
* நீ எண்ணுவது எல்லோருக்கும் சொந்தம், நீ உணர்வதே உனக்குச் சொந்தம். -'''ஷில்லர்'''
* மனிதனுடைய உடைமையா யிருக்கக் கூடியது அறிவு ஒன்றே. ஆகையால் அறிவை விருத்தி செய்வதே ஆசைப்பட்டு அடைய முயலத்தக்க ஒரே வெற்றியாகும். -'''பழமொழி'''
* உண்மை ஞானம் கண் முன் இருப்பதைக் காண்பதன்று, பின் வருவதை முன் அறிவதாகும். -'''டெரன்ஸ்'''
* எதை நாம் அறியவில்லையோ அது நம்முடைய தன்று. -'''கதே'''
* ஒரு விஷயத்தைப் பல வாயிலாகப் பார்க்க முடியாத புத்தி குறுகியதாகும். -'''ஜார்ஜ் எலியட்'''
* தான் தானாகவே இருக்க அறிவதே உலகில் பெரிய விஷயம். -'''மான்டெய்ன்'''
* அறிவின் முதல் பாடம் ஐஸ்வரியத்தை வெறுப்பது; அன்பின் முதல் பாடம் ஐஸ்வரியத்தை அனைவருக்குமாகச் செய்வது. - '''ரஸ்கின்'''
* உண்மை அறிவு அன்பில் கொண்டு சேர்க்கும். -'''வோர்ட்ஸ்வொர்த்'''
* உண்மையின் பெருங்கடல் நம்மால் அறியப்படாமல் பரந்து கிடக்கின்றது. நாமோ, கடற்கரையில் விளையாடி, அங்குமிங்கும் ஓடி, அழகான ஒரு சிப்பியையும் மெல்லிய ஒரு கடற் பாசியையும் கண்டு மகிழ்ந்து நிற்கும் சிறு குழந்தைகளைப் போல் இருக்கிறோம். -'''ஆவ்பரி'''
* சாஸ்திரிகளைப் போல் சாமர்த்தியமாய் அஞ்ஞானம் பேசுவதைவிட, சான்றோர்களைப்போல் சாமர்த்தியமின்றி ஞானம் பேசுதலே சாலச் சிறந்ததாகும். - '''செஸ்டர்டன்'''
* கூடிய மட்டும் துன்பம் விளையாமல் தடுத்துக் கொள்வதும், தடுக்கமுடியாத துன்பத்தைக் கூடிய மட்டும் பயன்படுத்திக் கொள்வதுமே அறிவு ஆகும். - '''ரஸ்கின்'''
* என்னை நகைக்கச் செய்வன நம் அறியாமைகள் அல்ல-நம் அறிவுகளேயாகும். -'''மான்டெய்ன்'''
* ஜீவனத்துக்கான சாதனமாக மட்டுமன்று, ஜீவிதத்துக்கான சாதனமாகவும் மனிதனுக்கு அறிவு தேவை. -'''ஆவ்பரி'''
* நூலறிவு பெற்றவன் குளத்தை யொப்பான்; மெய்யறிவு உடையவன் சனையை யொப்பான். -'''ஆல்ஜெர்'''
* பகுத்தறிவு என்பது உண்மையை அறியக் கடவுள் நமக்குத் தந்துள்ள ஒரே புனிதமான சாதனம். நம் அனைவரையும் ஒன்றாய் இயக்கத்தக்கது அதுவே. ஆனால், ஐயோ, நாம் அதைத்தான் நம்புவதில்லையே! -'''[[லியோ டால்ஸ்டாய்]]'''
* நூலறிவு வந்துவிடும், மெய்ஞ்ஞானம் வரத் தயங்குகின்றது. -'''டெனிலன்'''
* பிறர் வாசித்திருந்த அளவு நானும் வாசித்திருந்தால் அவர்களைப் போலவே நானும் அறிவில்லாத வனாயிருப்டிேன். -'''ஹாப்ஸ்'''
* அறிவாளி தன்னை மட்டும் உடையவனாயிருந்தால் போதும், அவன் ஒருபொழுதும் எதையும் இழப்பதில்லை. -'''மான்டெய்ன்'''
* தெரியாது என்று உணர்வது அறிவை அடைவதற்குப் பெரிய வழி. -'''டிஸ்ரேலி'''
* கற்றதை எல்லாம் முழுதும் மறக்க முடிந்த பொழுதே நாம் உண்மையில் அறிய ஆரம்பிக்கிறோம். -'''தோரோ'''
* தன்னலமின்மையும் நாணமுமே மெய்ஞ்ஞானத்தின் இலட்சணம். -'''ரஸ்கின்'''
* தன்னைப் பூரணமாய் அறியாதவன் ஒரு நாளும் பிறரைச் சரியாக அறிய முடியாது. -'''நோவாலிஸ்'''
* பயபக்தியில்லாத அறிவு அறிவாகாது. அது மூளை அபிவிருத்தியாயிருக்கலாம் அல்லது கைத்தொழில் அறிவாயிருக்கலாம். ஆனால் ஆன்ம அபிவிருத்தியாக மட்டும் இருக்காது. -'''கார்லைல்'''
* அறிஞர் பகைவரிடமிருந்தும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்வர். -'''அரிஸ்டோபீனிஸ்'''
* அறிவு பெற ஆற்றலுடைய ஒருவன் அறிவிலியாயிருப்பதைப் போன்ற துக்ககரமான விஷயம் வேறு எதுவுமில்லை. - '''கார்லைல்'''
* ஆறாத மரத்தை வேலைக்கு அதிகமாக உபயோகிக்கக் கூடாது - அதுபோல்தான் பண்படாத அறிவையும். -'''ஹோம்ஸ்'''
* அறிய முடியாததையும் அறிய முடியும் என்று நம்புவதை ஒருநாளும் கைவிடற்க. இன்றேல் அதைத் தேடப் போவதில்லை.-'''கதே'''
* நாம் அறிவதின் அளவு சுருங்குவதே நாம் அறிவில் முன்னேற்றம் அடைவதைக் காட்டும்-இப்படிக் கூறுவது முரணாகத் தோன்றலாம், ஆனால் உண்மையே ஆகும். -'''ஹாமில்டன்'''
* பக்தர் 'தன்'னைத் துறத்தல் போலவே அறிஞரும் 'தன்'னைத் துறத்தல் அவசியமானதே. -'''எமர்ஸன்'''
* அறிவிலிகள் அறிவாளிகள் மூலம் பயன்பெறுவதைக் காட்டிலும் அறிவாளிகள் அறிவிலிகள் மூலம் அதிகமாகப் பயன்பெறுவர். - '''கேடோ'''
* முடியுமானால் பிறரைவிட அறிவாளியாயிரு. ஆனால் அதை அவர்களிடம் கூறாதே. -'''செஸ்டர்பீல்டு'''
* வித்தையில் விருப்பமுடையவன், தன்னை முழுவதும் அதற்குத் தத்தம் செய்யவும், அதிலேயே தன் வெகுமதியைக் காணவும் திருப்தியுடையவனாயிருக்க வேண்டும். -'''டிக்கன்ஸ்'''
* பிறர் அறியாததை வைத்து அவர்களை மதித்தல் ஆகாது. அறிந்துள்ளதை எவ்வாறு அறிந்திருக்கின்றனர் என்பதை வைத்தே அவர்களை மதிக்கவேண்டும். -'''பிரெஞ்சுப் பழமொழி'''
* ஒரு பிராணி வாழ்வதைக் கண்டு நீ ஆனந்திக்கும் அளவே நீ அதை அறிய முடியும். வேறு வழியில் முடியாது. -'''ரஸ்கின்'''
* ஜலக் குமிழி தங்கக் கட்டிக்குச் சமானமாகுமானால் உயர்ந்த மூளையும் உண்மையான உள்ளத்திற்குச் சமானமாகும். - '''ஹோம்ஸ்'''
* நூலறிவு அதிகம் கற்று விட்டதாக அகத்தில் கர்வம் கொள்ளும். மெய்ஞ்ஞானம் இன்னும் அறிய வேண்டியது அதிகம் என்று தாழ்ச்சி சொல்லும். -'''கெளப்பர்'''
* சாக்கடை நீரில் குப்பையைக் காண்பதா, அல்லது வானத்தைக் காண்பதா? -உன் இஷ்டம். -'''ரஸ்கின்'''
* மெய்ஞ்ஞானம் கடவுளிடம் அடக்கத்தையும், ஜீவர்களிடம் அன்பையும், தன்னிடம் அறிவையும் உண்டாக்கும். -'''ரஸ்கின்'''
* அறிவுள்ள பிராணியாயிருப்பதில் அதிக செளகரியமே. அதைக்கொண்டு விரும்பியது எதற்கும் காரணம் சிருஷ்டித்துவிடலாம் அல்லவா? -'''பிராங்க்லின்'''
* தன் உபயோகத்திற்கும் அவசியத்திற்கும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளாதவன் வேறு எவற்றை அறிந்திருந்தாலும் அறிவில்லாதவனே ஆவான். -'''டிலட்ஸன்'''
* யோசனை செய்யாதிருக்கக்கூடிய இடம் மரண சயனம் ஒன்றே. ஆனால் யோசனை செய்வதை அந்த இடத்திற்காக ஒருபொழுதும் விட்டுவைக்கக் கூடாது. - '''ரஸ்கின்'''
* அறிவின் முன்னணியில் போர் புரிவோர்க்குப் பெரும்பான்மையோர் ஆதரவு ஒரு நாளும் கிடைப்பதில்லை. -'''இப்ஸன்'''
* ஒன்றும் அறியாதவன் தான் கற்றுக்கொண்டதைப் பிறர்க்குக் கற்றுக் கொடுப்பதாய் நம்பிக்கொள்கிறான். அதிகம் அறிந்தவன் தான் கூறுவது பிறர் அறிந்திருக்க முடியாது என்று நினைப்பதில்லை. -'''லா புரூயர்'''
* குறைந்தபட்சத் தீமையும், கூடிய பட்ச நன்மையும் விளையும்படி வாழ்வதே உலகில் தலை சிறந்த ஞானமாகும். -'''ரொமெய்ன் ரோலண்டு'''
* குறுகிய புத்தியுள்ள மனிதர் குறுகிய கழுத்துள்ள பாட்டில்களை ஒப்பர். அகத்தில் அற்பமாயிருந்தால் புறத்தில் ஊற்றும்பொழுது அதிகச் சப்தம் செய்யும். -'''ஸ்விப்ட்'''
* தீயவன் ஒருநாளும் மெய்யறிவு பெற்றதில்லை. ஆம், ஒருநாளும் மெய்யறிவு பெற்றதில்லை. இது முக்காலும் உண்மை. - '''போப்'''
* 'அறியாமை'யால் நமக்குச் செளகரியங்கள் கிடையாமல்போகும் என்பது மட்டுமன்று-நமது கேட்டிற்கு நம்மையே வேலை செய்யத் துண்டுவதும் அதுவே. அது அறிவு 'இன்மை' என்பது மட்டும் அன்று-சதா காலமும் துன்பம் தந்துகொண்டிருக்கும் தவறுகளின் 'நிறைவு'ம் ஆகும். -'''ஸாமுவேல் பெய்லி'''
* பார்க்க மாட்டோம் என்று சாதிக்கும் அளவுக்குக் குருடாயுள்ளவர் உலகில் கிடையார். -'''ஸ்விப்ட்'''
* ஒருவனுக்கு அறிவிருந்தும் ஆற்றல் இல்லையாகில் அவன் வாழ்வு பாழே. -'''ஷாம்பர்ட்'''
* கண் குருடு என்று இரங்குவதுபோலவே அறிவு சூனியம் என்பதற்கும் இரங்க வேண்டும். - '''செஸ்டர்பீஸ்டு'''
* மூளையின் முன்புறம் (அறிவு) பின்புறத்தை (உணர்ச்சியை) உறிஞ்சி உலர்த்திவிடுமானால் கேடே. அறிவினால் மட்டுமே நம்மை பெற்றுவிட முடியாது. விசாலமான நெற்றிக்கே எப்பொழுதும் இறுதியில் வெற்றி. ஆனால் வெற்றி கிடைப்பது தலையின் பின்புறம் மிகப்பருமனாயுள்ள பொழுதே. -'''ஜே. ஆர். லவல்'''
* அறிஞனுக்கு அனைத்துலகும் தாய்நாடே. சாந்தமான மனத்திற்கு எந்த இடமும் அரண்மனையே. -'''லில்லி'''
* அறிவிலி இடத்தையும் காலத்தையும் குறுக்க விரும்புகிறான். அறிஞனோ அவற்றை நீட்டவே விரும்புகிறான். -'''ரஸ்கின்'''
* தனக்குத்தானே வழிகாட்டி என்னும் வண்ணம் போதுமான அறிவுடையார் யாருமிலர். -'''அக்கம்பிஸ்'''
* வாழ்விடமிருந்தோ மக்களிடமிருந்தோ அதிகமாக எதிர் பாராதிருத்தலே மெய்யறிவின் ஜீவ அம்சமாகும். -'''மார்லி'''
* ஏறிக்கொள்ள அசுரனுடைய தோள்கள் கிடைக்குமானால் குள்ளன் அசுரனைவிட அதிகத் துரம் பார்க்க முடியும். -'''கோல்ரிட்ஜ்'''
* ஷேக்ஸ்பியர் என்னைவிட அதிக உயரமுள்ளவரே. எனினும் நான் அவரைவிட அதிகத் தூரம் பார்க்க முடியும். நான் அவருடைய தோள்களின் மேல் அல்லவோ நிற்கின்றேன்! - '''பெர்னார்டு ஷா'''
* ஒன்றுமே அறியாதவன் வாழ்பவன் ஆகமாட்டான். - '''கிரேஸியன்'''
* அறிவை எதிர்ப்பவர் நெருப்பைக் கிளறுபவர் ஆவார். நெருப்புப் பொறி பறந்து எரிக்க வேண்டாதவற்றையும் எரித்துவிடும்.
-'''கதே'''
* ஒருவனுடைய அறிவை அபகரித்துவிட்டால் அவனைச் சிசு நிலைமையில் வைப்பதாகாது. விலங்கு நிலைமையில்-அதுவும் விலங்குகளில் எல்லாம் அதிகத் துஷ்டத்தனமான விலங்கின் நிலைமையில் வைப்பதேயாகும். -'''அர்னால்டு'''
* அற்ப அறிவு அபாயகரம் என்றால், அபாயம் நேராத அளவு அதிக அறிவு அடைந்துள்ளவன் எவன்? -'''ஹக்ஸ்லி'''
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
{{விக்கிப்பீடியா|அறிவு}}
"https://ta.wikiquote.org/wiki/அறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது