உண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
* காலம் பொன் போன்றது; ஆனால் அதைவிட உண்மை சிறந்தது. - '''டிஸ்ரேலி'''
* உண்மையே ஞானத்தின் உறைவிடம். - '''பழமொழி'''<ref name=வாய்மை>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88 | title=உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை | publisher=மெய்யம்மை நிலையம் | work=நூல் | date=திசம்பர் 2000 | accessdate=13 மே 2019 | author=என். வி. கலைமணி | pages=23- 29}}</ref>
* மனிதனுடைய முதல் மொழி 'ஆம்' இரண்டாவது 'அன்று'; மூன்றாவதும் இறுதியானதும் 'ஆம்'. பலர் முதலாவதோடு நின்று விடுவர்; வெகு சிலரே இறுதி மொழிவரை செல்வர். - '''பழமொழி'''<ref name=வாய்மை/>
* உண்மை உரைத்துச் சாத்தானை நாணமடையச் செய்க. - '''ராபிலே'''<ref name=வாய்மை/>
* கடவுள் சிருஷ்டிகளின் தலைசிறந்தது சத்திய வந்தனே, - '''போப்'''<ref name=வாய்மை/>
* உயர்ந்த உண்மை மலர்வது ஆழ்ந்த அன்பிலேயே. - '''ஹீன்'''<ref name=வாய்மை/>
* உண்மையை நாம் அறிவினால் மட்டும் காண்பதில்லை, அன்பினாலும் காண்கிறோம். - '''பாஸ்கல்'''
* உலோபியைப் போல், உள்ளம் நிறைந்த உண்மையும் ஒலைக் குடிசையிலேயே வாழ்கின்றது. - [[வில்லியம் ஷேக்ஸ்பியர்]]
* உண்மையின் முகம் அவ்வளவு அழகு தோற்றம், அவ்வளவு கம்பீரம்:-அதைப் பார்த்தால் போதும் நேசியாமல் இருக்க முடியாது. - '''ட்ரைடன்'''<ref name=வாய்மை/>
* உலகத்தார் நாடும் பெருமைகள் வேண்டேன். உண்மை அறிவதொன்றே என் விருப்பம். - '''லாக்ரடீஸ்'''<ref name=வாய்மை/>
* கடவுள் வலது கையில் முழு உண்மையையும், இடது கையில் உண்மையைத் தேடுவதில் அழியா ஆசையையும் வைத்துக்கொண்டு, எது வேண்டும் என்று என்னைக் கோட்டால்-இடது கையில் உள்ளதை விரும்பினால் என்றும் இருட்டிலேயே இருக்க வேண்டியிருப்பினும்- நான் இடது கை முன் தலையைத் தாழ்த்தி, 'தந்தையே தாரும்; உண்மை உமக்கே உரியது' என்று கூறுவேன். ஏனெனில், மனிதன் உண்மையை அடைவதாலன்றி உண்மையைத் தேடுவதாலேயே பரிபூரணத்துவத்தைத் தன்னிடம் இடைவிடாது வளர்த்துக் கொள்வதற்குரிய தன் சக்திகளை விருத்தி செய்துகொள்கிறான். - '''லெஸ்ஸிங்'''<ref name=வாய்மை/>
* உண்மையை நேசி. ஆனால், பிழையை மன்னித்து விடு. -'''வால்டேர்'''<ref name=வாய்மை/>
* அன்பு சில குறைகளையும், அறிவு சில பிழைகளையும் பொருட்படுத்தா. ஆனால், உண்மை எந்த அவமானத்தையும் மன்னிக்காது; எந்தக் குறையையும் பொறுக்காது. - '''ரஸ்கின்'''<ref name=வாய்மை/>
* ஏன் உண்மையாய் நடக்க வேண்டும்?- இந்தக் கேள்வி மூலமே இகழ் தேடிவிட்டாய்- 'மனிதனாயிருப்பதால்' என்பதே அதற்கு மறுமொழி. - '''ரஸ்கின்'''<ref name=வாய்மை/>
* உண்மை பேசல் அழகாய் எழுதுவதை ஒக்கும். பழகப் பழகவே கைகூடும். ஆசையைவிடப் பழக்கத்தையே பொறுத்ததாகும். - '''ரஸ்கின்'''<ref name=வாய்மை/>
* உண்மை நாடவே நமக்கு உரிமை ஆண்டவனுக்கே அது உடைமையாகும். - '''மான்டெய்ன்'''<ref name=வாய்மை/>
* உண்மையை அடைய விரும்பினால் உண்மைக்குரிய வழியில் சிறுகச் சிறுக முன்னேறிச் செல்க. - '''டாலர்'''<ref name=வாய்மை/>
* மனிதன் பிறந்துள்ளது உண்மையைத் தேடவே. ஆனால் அதை அடையும் பாக்கியம் வேறொரு பெரிய சக்திக்கே உண்டு. - '''மான்டெய்ன்'''<ref name=வாய்மை/>
* உண்மையைக் கண்டுபிடிப்பதே மனிதனுடைய மகோன்னதமான லட்சியம், உண்மையைத் தேடுவதே பரமோத்தமமான தொழில். அது அவனுடைய கடமையும் ஆகும். -'''எட்வர்ட் போப்ஸ்'''<ref name=வாய்மை/>
* நம்பக்கம் உண்மையிருப்பது வேறு. நாம் உண்மையின் பக்கத்தில் இருக்க விரும்புவது வேறு. -'''லிட்வா'''<ref name=வாய்மை/>
* எல்லா அம்சங்களிலும் உண்மையான உபதேச மொழிகள் சிலவே. - '''வாவனார் கூஸ்'''<ref name=வாய்மை/>
* ஒன்றே உள்ளது. பல மாறி மறையும். விண்ணின் வெளிச்சம் என்றும் ஒளி தரும். மண்ணின் நிழல்கள் பறந்தோடிவிடும். - '''ஷெல்லி'''<ref name=வாய்மை/>
* உண்மை உரைப்பதற்குச் சாத்தியமான ஒரே வழி கலைதான், அதுதான் கலையின் புகழும் நன்மையும் ஆகும். - '''ராபர்ட் பிரெளணிங்'''<ref name=வாய்மை/>
* பொருள் சேர்ப்பதில் மட்டுமன்று புகழ் தேடுவதிலுங்கூட நாம் மரிக்கும் மனிதரே. ஆனால், உண்மையை நாடுவதில் நகம் அமரர். அழிவுக்கும் மாறுதலுக்கும் அஞ்ச வேண்டுவதில்லை. -'''தோரோ'''<ref name=வாய்மை/>
* பெரிய விஷயங்களைப் போலவே சிறிய விஷயங்களையும் கவனிக்கக்கூடிய மனமே உண்மையும் உரமும் பொருந்திய மனமாகும். -'''டாக்டர் ஜான்ஸன்''' <ref name=வாய்மை/>
* ஒவ்வொன்றிலும் நன்மையைக் காணவும் போற்றவும் அறிவதே உண்மையிடம் ஆசை உண்டு என்பதற்கு அடையாளம். -'''கதே'''<ref name=வாய்மை/>
* உண்மை மனிதனுக்குச் சொந்தம்; பிழை அவனுடைய காலத்துக்குச் சொந்தம். -'''கதே'''<ref name=வாய்மை/>
* உண்மை ஒரு பெரிய தீவர்த்தி. அருகில் செல்ல பயந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டே அதைக் கடந்து செல்கிறோம். -'''கதே'''<ref name=வாய்மை/>
* தரையோடு தரையாய் நசுக்கப்பட்டாலும், சத்தியம் மறுபடியும் எழுந்து நிற்கவே செய்யும். ஆண்டவனுடைய அந்தமில்லா ஆண்டுகள் அதற்கும் உண்டு. -'''பிரையண்ட்'''<ref name=வாய்மை/>
* சத்திய நெஞ்சுக்குள்ள ஒரே ஓர் அசெளகரியம் யாதெனில், எளிதாய் நம்பிக்கொள்ளும் தன்மையே. -'''ஸ்ர் பிலிப் லிட்னி'''<ref name=வாய்மை/>
* எப்பொழுதும் சமர்க்களத்தில் அல்லது செயக் கொண்டாட்டத்தில் இருப்பவன் சத்தியத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருத்தல் துர்லபம். -'''கெளலி'''
* நமக்கு ஆனந்தம் அளிக்கக் காரணமாய் இருப்பது எதையும் மாயை என்று கூற நியாயமே கிடையாது. -'''கதே'''<ref name=வாய்மை/>
* உண்மையே தெய்வீகம் பொருந்தியது. சுதந்திரம் இரண்டாவது ஸ்தானம் பெறும். உண்மை உணர்வதற்குச் சுதந்திரம் அவசியமானாலும் சுதந்திரத்தோடு உண்மை சேராவிடில், சுதந்திரத்தால் ஒரு பயனும் உண்டாகாது. -'''மார்லி'''<ref name=வாய்மை/>
* முரணில்லாதிருக்க முயல்க. உண்மையாயிருக்க மட்டுமே உழைத்திடுக. -'''ஹோம்ஸ்'''<ref name=வாய்மை/>
* அதிகமான ஜனங்கள் நம்புகிறார்களா? அப்படியானால் அவ்வளவுக் கவ்வளவு அதிக ஜாக்கிரதையாக அந்த விஷயத்தை ஆராய்தல் அவசியம்.-[[லியோ டால்ஸ்டாய்]]<ref name=வாய்மை/>
* உயிரளிக்கும் உண்மையினின்று நம்மைப் பிறழச் செய்யும் சகப் பொய்கள் நாசமாய் ஒழிக! -'''டெனிலன்'''<ref name=வாய்மை/>
* ஏதேனும் ஓர் உண்மையைத் தள்ளி மிதித்து விட்டால், அது சமாதான மொழியாயிருப்பதற்குப் பதிலாகச் சமர் தொடுக்கும் வாளாய் மாறிவிடும். -'''ஹென்றி ஜார்ஜ்'''<ref name=வாய்மை/>
* 'சடங்கு' -அதன் அடியார் குழாங்கள் உபயோகமற்ற நிழல்களுக்காக உயில் துறக்க எப்பொழுதும் தயார் 'உண்மை' - அழியா விஷயங்களின் அன்னை. ஆயினும் அதற்கு ஒரு நண்பனைக் காண்பது அரிது. -'''கூப்பர்'''<ref name=வாய்மை/>
* உண்மையாக இருக்கத் துணிக. ஒன்றிற்கும் பொய் வேண்டியதில்லை. பொய்யை விரும்பும் குற்றம் அதனாலேயே இரண்டு குற்றமாய்விடும். -'''ஹெர்பர்ட்'''<ref name=வாய்மை/>
* சுருதிக்காக அறிவை அகற்றுபவன் இரண்டின் ஒளியையும் அவிப்பவனாவான். அவன் செயல், க்ண்ணுக்கு எட்டா நட்சத்திரத்தைத் தூர திருஷ்டிபக் கண்ணாடி வழியாய்த் தெளிவாய்ப் பார்ப்பதற்கு என்று கண்களை அவித்துக் கொண்டது போலாகும். -'''லாக்'''<ref name=வாய்மை/>
* தவறு ஒன்றுதான் சர்க்கார் தயவை வேண்டும். உண்மைக்கு அது வேண்டியதில்லை. -'''தாமஸ் ஜெவ்வர்ஸன்'''
* எந்தப் பொய்யும் வயோதிகம் அடையும் வரை வாழ்ந்ததில்லை. -'''லோபோகிளீஸ்'''<ref name=வாய்மை/>
* முதலில் தூசியைக் கிளப்பி விடுகிறோம். பின்னால் பார்க்க முடியவில்லை என்று முறையிடுகிறோம். -'''பிஷப் பார்க்லி'''<ref name=வாய்மை/>
* மெய்யும் பொய்யும் கை கலக்கட்டும். பகிரங்கமாகக் கை கலந்து போர் புரியின், என்றேனும் மெய் தோல்வியடைந்ததைக் கண்டவர் உளரோ? - '''மில்டன்'''<ref name=வாய்மை/>
* பாவத்திற்குப் பல கருவிகள் உண்டு. ஆனால் அவற்றிற்கெல்லாம் பொருத்தமான கைபிடி பொய். -'''ஹோம்ஸ்'''<ref name=வாய்மை/>
* பொய்யானவற்றால் கவரப்படும் மனம் நல்ல விஷயங்களில் சுவை காணாது. -'''ஹொரேஸ்'''<ref name=வாய்மை/>
* முதலில் ஒரு குற்றம் செய்தவன் அதை மறைக்கப் பொய்யுரைக்கும் பொழுது இரண்டு குற்றங்கள் செய்தவனாகிறான். -'''வாட்ஸ்'''<ref name=வாய்மை/>
* முதலில் பொய்யாய்த் தோன்றுவது எல்லாம் பொய்யாகி விடா. -'''கதே'''<ref name=வாய்மை/>
* பிழை செய்தால் பிறர் கண்டுகொள்ள முடியும். ஆனால் பொய்கூறினால் பிறர் கண்டுகொள்ள முடியாது. -'''கதே'''<ref name=வாய்மை/>
* பலவீனத்தின் அளவே பொய்மையின் அளவும். பலம் நேரிய வழியில் செல்லும் குழிகள் அல்லது துளைகள் உள்ள ஒவ்வொரு பீரங்கிக் குண்டும் கோணியே செல்லும், பலமற்றவர் பொய் சொல்லியே தீரவேண்டும். -'''ரிக்டர்'''<ref name=வாய்மை/>
* முழுப் பொய்யோடு முழு வல்லமையுடன் போர்புரிய முடியும். ஆனால் மெய் கலந்த பொய்யோடு போர்புரிதல் கஷ்டமான காரியம். -'''டெனிஸ்ன்'''<ref name=வாய்மை/>
* மெய் கலந்த தவறுகளே அபாயகரமானவை. மெய்க் கலப்பாலேயே அவைகள் எங்கும் பரவச் சாத்தியமாகின்றது. -'''ஸிட்னி ஸ்மித்'''<ref name=வாய்மை/>
* சுத்தப் பொய்யால் ஒரு நாளும் தொந்தரவு உண்டாவதில்லை. -'''ஸிட்னி ஸ்மித்'''<ref name=வாய்மை/>
 
=== [[மகாவீரர்]] ===
"https://ta.wikiquote.org/wiki/உண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது