திரு. வி. கலியாணசுந்தரனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்''' அல்லது '''திரு. வி. க.''', (ஆகத்து 26, 1883 - செப்டம்பர் 17, 1953<ref>{cite news|url=http://www.hinduonnet.com/2003/09/19/stories/2003091900680900.htm |title= செப்டம்பர் 19, 1953: திரு. வி. க.வின் மறைவு| publisher= த இந்து | date= செப்டம்பர் 19, 2003, மூலப்பதிப்பு செப். 19, 1953}}</ref>) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் ''தமிழ்த்தென்றல்'' என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
== நாடு ==
* நாடு என்பது ஓர் எல்லைக்கு உட்பட்ட வெறும் நிலப்பரப்பு மட்டுமன்று. நிலத்தின் இயற்கைத் தன்மையினினின்றும் முகிழ்ந்த வாழ்க்கை. அரசு, கலவி, தொழில், நாகரிகம் முதலியனவும் சேர்ந்த ஒன்றே நாடு என்பது.<ref name=திருவிக/>
 
== மொழி ==
* நாட்டைப் பண்படுத்தும் கருவிகள் பல. அவைகளுள் சிறந்தது மொழி. ஆதலால், நாட்டவர்க்கு மொழிப்பற்று இன்றியமையாதது.<ref name=திருவிக/>
* நாடு என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டது. அம்மொழியை வஞ்சிப்பது பிறந்த நாட்டை வஞ்சிப்பதாகும்.<ref name=திருவிக/>
* ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் மொழி நிலையைப் பொறுத்தே நிற்கும்.<ref name=திருவிக/>
 
== கல்வி ==
* மக்கள் உடலுக்கு உணவு எத்தகையதோ அத்தகைத்து மகள் அறிவிற்குக் கல்வி. மனிதன் அறியாமையைக் கல்வி அறிவை விளக்கி அவனது வாழ்வை நேர்மையில் செலுத்தவல்லது கல்வி.<ref name=திருவிக/>
* கல்வி என்பது வெறும் ஏட்டுப் படிப்பு மட்டுமன்று. பட்டம் பதவிகளைக் குறிக்கொண்டு படித்தலும் கல்வியாகாது. கல்வி என்பது அறியாமையை நீக்கி அறிவை விளங்கச் செய்வது.<ref name=திருவிக/>
* நாம் தமிழ் மக்கள். நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி கற்றலே சிறப்பு. அதுவே இயற்கை முறை.<ref name=திருவிக/>
 
== இளமைப் பருவம் ==
* இளமைப் பருவம் கல்விக்கெனக் கொடுக்கப்படுவது. அப்பருவத்தை வேறு வழியில் செலவழிப்பது இயற்கைக்கு மாறுபட்டு நடப்பதாகும். இளமையை மாறுபட்ட வழியில் கழிப்பவன் வாழ்வு முற்றிலும் இடர்ப்பட்டுக்கொண்டே போகும்.<ref name=திருவிக/>
* எதையும் இளமையிலேயே பயிலல் வேண்டும். வாழ்வெனும் மரத்துக்கு இளமைப் பயிற்சி வேர் போன்றது. ஒருவனது வாழ்வுக்கு இளமை அடிப்படை.<ref name=திருவிக/>
 
== மாணாக்கர் ==
* மாணாக்கர் என்னுஞ்சொல் விழுமிய பொருளுடையது. பின்வாழ்விற்கு வேண்டப்படும் மாண் பொருளை ஆக்குதற்கு வேண்டப்படும் மாண் பொருளை ஆக்குதற்கு ஒழுக்கநெறி நிற்போர் மாணாக்கராவார்.<ref name=திருவிக/>
* மாணாக்கருலகிற்கு முதல் வேண்டற்பாலது ஒழுக்கம். ஒழுக்கம் கல்வி அறிவிற்கு அடிப்படை.<ref name=திருவிக/>
* ஒழுங்கை மாணாக்கர் உறுதியாகக் கடைப்பிடித்து ஒழுகுவாரானால் வருங்காலத்தில் நாடே நன்னிலை எய்தும்.
* பள்ளியில் படித்துவருங்கால் மாணாக்கர் வேறு துறைகளில் கருத்துச் செலுத்தலாகாதென்று யான் அவர்க்கு அறிவு கொளுத்துவதை எனது கடமைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளேன்.<ref name=திருவிக/>
 
== சுற்றுலா ==
மாணாக்கர் ஓய்ந்த வேளைகளில்தரை வழியாலோ கடல் வழியாலோ சென்று பல பகுதிகளைப் பார்த்தல் வேண்டும்; பல மக்களோடு பழகல் வேண்டும்; உலக இயல்களை நன்கு தெளிதல் வேண்டும். இச்சொலவால் அவர் இயற்கைக் கல்வியறிவு பெறுதல் கூடும். மாணாக்கர் வாழ்விற்கு இச் செலவு மிக இன்றியமையாதது.<ref name=திருவிக/>
 
== உணவு ==
** உணவு முறைகள் பெரிதும்கவனிக்கற்பாலன. முதலாவது, வேளை நாழியின்றிச் சாப்பிடுவதை நிறுத்தல் நல்லது. பசித் தோற்றம் இல்லாதபோது எக்காரணம்பற்றியும் உணவு கொள்ளளாகாது.<ref name=திருவிக/>
** மீதூண் கொள்வது அறியாமை. நோய்க்கும் அகால மரணத்துக்கும் அடிகோல்வது மீதூணாகும். முன்னே உண்டது செரிப்பதற்குள், மேலே உண்டு சுமை சுமத்திக் கொண்டிருத்தல், ஈரலுக்குச் சவலை ஏற்படுத்தும்; பின்னே மற்றப் பேருறுப்புகட்குக் கேடு நிகழும். அதனால், பிணியும் அகால மரணமும் நேரும்.<ref name=திருவிக/>
 
== உடை ==
** உடையிலும் மனிதன் எளிய உடை அணியவே பயிறல் வேண்டும். சுமை சுமையாக உடையணிவது தவறு. அச்சுமை உடல் வளத்தை நாளடைவில் குலைத்துவிடும். நாட்டின் இயற்கை வளத்துக்கேற்ற உடைதரித்தல் அறிவுடமை.<ref name=திருவிக/>
** எளிய உணவும் எளிய உடையும் மனித வாழ்வை பண்படுத்தும் இயல்பின.<ref name=திருவிக/>
 
== உடற்பயிற்சி ==
** உடற்பயிற்சிக்குரிய நேரம் காலையும் மாலையுமாகும். இருவேளை செய்ய இயலாதோர் காலையில் மட்டும் செய்வது நலம். காலையில் இயலாதோர் மாலையில் ஆற்றலாம். காலை நேரம் மிக உரியது.<ref name=திருவிக/>
** வியர்வை சொட்டச்சொட்டப் பயிற்சி செய்து, பின்னைச் சிறிது நேரம் தாழ்ந்து நீராடுதல் வேண்டும்.<ref name=திருவிக/>
 
== குளித்தல் ==
* ஊற்று நீரில் நாடோறுங் காலையில் திலை முழுகல் வேண்டும். மூழ்குதற்குத் தண்ணீரே சால்புடைத்து. நரம்புகட்குத் திண்மையும் உரமும் ஊட்டும் நீர்மை தண்ணீருக்குண்டு. நறுந்தண்ணீர் கிடையாவிடத்து வெந்நீரில் மூழ்குவது நலம். வெந்ரையும் தண்ணீரையும் கலந்து முழ்கல் நலன் பயப்பதாகாது.<ref name=திருவிக/>
 
== உறக்கம் ==
*உறக்கம் நல்லுடலுக்கு அறிகுறி. அதன் குலைவு நோயுடலுக்கு அறிகுறி. பகல் விழிப்பும் இரவில் உறக்கமும் வாழ்க்கைக்குத் தேவை. முகத்தை மூடி உறங்குதல் கூடாது.<ref name=திருவிக/>
 
== பெண்நலன் ==
* பெண் தாயாகலான் பெண்ணலன் பெரிதும் ஓம்பப்பெறல் வேண்டும். பெண்ணலன் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவல் அரிது. ஒரு நாட்டுக்கு நலன் அந்நாட்டுப் பெண் மக்கள் நிலையைப் பொறுத்தே நிற்கும்.<ref name=திருவிக/>
* ஒரு நாட்டின் நாகரிகம் அந்நாட்டின் பெண் மக்கள் நிலையைப் பொறுத்து நிற்கிறதென்பது எவரும் ஏற்கத்தக்க உண்மை. பெண்மக்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, இடுக்கணுமின்றிப் பிறப்புரிமை இன்பத்தை எங்கே நுகர்கிறார்களோ அல்கேயுள்ள ஆண்மக்கள் நாகரிக நுட்பம் உணர்ந்தவர்களாகிறார்கள். அந்நாடே நாகரிகம் பெற்றதாகும்.<ref name=திருவிக/>
 
== தீண்டாமை ==
* பிறப்பில் தீண்டமை கருதுவது கொடுமை; வண்கண்; அநாகரிகம்.<ref name=திருவிக/>
* தீண்டாமை கொண்ட நாடு பொலிவிழத்தல் திண்ணம்.<ref name=திருவிக>{{cite book | title=திருவிக | publisher=தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம் | author=புலவர் ஆயை. மு. காசாமைதீன் | authorlink=திரு. வி. க. மணிமொழிகள் | year=1984 | location=சென்னை | pages=112- 118}}</ref>
== இவர்குறித்த மேற்கோள்கள் ==
"https://ta.wikiquote.org/wiki/திரு._வி._கலியாணசுந்தரனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது