இறையருள் குறித்த தேற்கோள்கள்

  • நன்மையான வாழ்க்கையும் இன்பமான மரணமும் உண்மையான அருளாகும். - ஸோலன்
  • வாழ்வின் நற்பொருள்கள் தனித்தனியாகக் கிடைப்பதில்லை. அவை கலவைகளாகவே வரும்: பள்ளி மாணவனுடைய விடுமுறையில் அவன் செய்து முடிக்க வேண்டிய வீட்டு வேலையும் சேர்ந்துதான் இருக்கும். அது போன்றவையே எல்லா நற்பொருள்களும். - சார்லஸ் லாம்ப்[1]
  • நல்ல செயல்களுக்கு உரிய அருட்பயன்கள் காத்திருக்கின்றன. சிறிது தாமதமாக வந்த போதிலும். அவை வந்தே தீரும். -காங்கிரீவ்[1]
  • ஆண்டவன் அன்புக்கு உரியவர்கள் ஏழைகளைப் போன்ற பணிவு பெற்றுள்ள செல்வர்களும், செல்வர்களைப் போன்ற பெருந்தன்மையுள்ள ஏழைகளும், ~ ஸா அதி[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 110-111. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இறையருள்&oldid=20164" இலிருந்து மீள்விக்கப்பட்டது