அறப் போராட்டம்
அறப் போராட்டம் அல்லது அகிம்சை (Nonviolence) என்பது பொதுவாக உரிமைகளை வென்றெடுப்பதற்காக வன்முறை இன்றி அறவழியில் போராடுவதைக் குறிக்கும். எதிராளிக்கு வன்முறையால் தீங்கு விளைவிக்காமல் அவர் மனதை மாற்றி, உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயல்வதே இதன் அடிப்படை நோக்கமாகும்.